Showing posts with label நீதிக்கடவுள். Show all posts
Showing posts with label நீதிக்கடவுள். Show all posts

Monday, May 19, 2014

நீதிக்கடவுள்

நீதிக்கடவுள்:

நீதியும் பெண்மையும் ஒரே வகையில் ஒத்து இருப்பவை. 

பெண்கடவுள் தெமிஸ் (Themis) என்பவர் கிரேக்க மகாகடவுள் ஜூயஸின் (Zeus) மனைவிகளுள் ஒருவர். இவரே சட்டத்துக்கும், நடைமுறை பழக்க வழக்கத்துக்கும் தேவதை. பழக்க வழக்கம்தான் சட்டமாக ஆகியது. ஒரே பழக்க வழக்கத்தை பழகி வந்தால் அதுவே பிற்காலத்தில் சட்டம். 

ரோமன் கலாச்சாரத்தில் இந்த நீதிதேவதைக்கு ஜஸ்டிசியா என்று பெயர் (Justitia or Lady Justice). இந்த ரோமன் நீதி தேவதைதான் அவளின் இடது கையில் ஒரு தாராசை வைத்திருக்கிறாள். அவளின் வலது கையில் ஒரு வீரவாள் வைத்திருக்கிறாள். இதற்கு நியாயமும் நீதியும் இருப்பதாக உருவகப்படுத்தப் பட்டுள்ளது. அவளின் கண்கள் துணியால் கட்டப்பட்டுள்ளது. தனக்கு முன்னால் நீதிகேட்டு நிற்பவர் தனக்கு வேண்டியவர் என்றோ, வேண்டாதவர்  என்றோ, யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் நீதி வழங்கவதற்காக கண்ணைக் கட்டிக் கொண்டாள். 

நமது இதிகாசங்களில் எமனை நாம் நீதிதேவன் என்கிறோம். சித்திரகுப்தனிடம் உள்ள நமது பாவ-புண்ணிய கணக்குப்படி இந்த தீர்ப்பு இருப்பதாக நம்புகிறோம். யமன் நமது இறப்புக்குப்பின் கணக்கு பார்ப்பவன்.

சூரியனின் புத்திரனாக சனியும் நீதிதேவனே. அவன் நம் வாழ்நாளிலேயே கணக்கு பார்த்து பலன் கொடுத்து விடுவான். போனபிறவி பாவ-புண்ணியத்தைப் பொறுத்து இந்தப் பிறவியில் பலன் தருவானோ என்னவோ!

நீதி என்பது கண்டிப்பான தண்டனையாகத்தான் இருக்க வேண்டும். தெய்வநீதி சரியாக இருக்கும்போது, மனித நீதியும் அவ்வாறே இருக்க வேண்டும்.