Showing posts with label குமரகுருபர சுவாமிகள். Show all posts
Showing posts with label குமரகுருபர சுவாமிகள். Show all posts

Saturday, October 18, 2014

பேச்சைக் கேட்கும் புலி இருந்த காலம்...

குமரகுருபர சுவாமிகள்.
இவர் தனது 10 வயது வரை ஊமையாக இருந்தவர். இவரின் தந்தை, இவரை திருசெந்தூர் முருகனின் ஆலயத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டார்.

அங்கு முருகன் இவரின் ஊமைதன்மையை நீக்கி, கவிபாடும் அளவுக்கு பாடும் சக்தியைக் கொடுத்து விட்டார். அதுமுதல் அற்புதமாகக் கவி பாடுகிறார்.

இவர் காசி யாத்திரைக்கு நடந்தே செல்கிறார். வழியில், வேங்கடகிரி காட்டில் ஒரு புலி, வருவோர் போவோரை கடித்து கொன்று விடுகிறது. அந்த வழியில் இவர் போகிறார். வழியில் அதே புலி வருகிறது. இவரிடம் ஏதோ கடவுள் அருள் இருக்கும்போல. அற்புதங்களையும் செய்கிறார். இவர் அந்தப் புலியை அழைக்கிறார். அது இவரிடம் பம்மிக் கொண்டு வருகிறது. என்னை காசியில் விட்டுவிடு என்கிறார். அதன் முதுகில் ஏறி உட்காருகிறார். அதுவும் இவரைச் சுமந்து கொண்டு காசி வழியில் செல்கிறது. வழியில் யாருக்கும் எந்த துன்பமும் கொடுக்கவில்லை.

இந்த விஷயத்தை அப்போது அரசாண்ட மன்னன் அக்பர் கேள்விப்படுகிறார். அந்த துறவியை நம் அரண்மனைக்கு அழைத்து வாருங்கள் என்று ஆணையிடுகிறார். அதனால், துறவி அங்கு செல்கிறார். துறவிக்கு மன்னர் அக்பர் மரியாதை செய்கிறார். ஆனால் அதைப் பார்த்த அந்த மத ஆசாரியர்கள் அதை விரும்பவில்லை. மன்னனின் விருந்து நடக்கிறது. அந்த விருந்தில், மாட்டு மாமிசம் கறியாக சமைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறவியோ காய், கனிகள் மட்டும் சாப்பிடுவார். அவரின் தட்டிலும் மாட்டுக்கறி.
ஆனாலும், அவர் சொல்கிறார், "எனக்கு மரக்கறி உணவும், பன்றிக்கறி உணவும் ஒன்றுதான். நான் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை." என்று கூறுகிறார். படைத்திருப்பதோ மாட்டுக்கறி. இவர் அதை பன்றிக் கறி என்கிறார் என குழம்புகின்றனர். முகமதியர்கள் பன்றிக் கறியை அவர்களின் மதவழக்கப்படி உணவாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எனவே எல்லோரும் பதறி எழுந்துவிட்டனர்.

அப்போதும், பொறுமையாக, ஏன் எல்லோரும் எழுந்துவிட்டீர்கள். எல்லோர் தட்டிலும் என்ன இருக்கிறதென்று பாருங்கள், என்று சொல்கிறார். அமிர்தமான கனிவகைகள் தட்டில் இருக்கின்றன. அதிசயமாக இருக்கிறது. உடனே அவர்கள் மன்னிப்பு கேட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு அவருக்கு உதவிகளைச் செய்கிறார்கள்.

மன்னர், இவரின் வேண்டுகோளுக்கிணங்க, கங்கை துறைகளையும், விஷ்வநாத சுவாமி கோயிலுக்கும், அம்மைக்கும் அனேக மானியங்களை கொடுத்து உதவுகிறார்.
இவர் எழுதிய நூல்கள் மிகச் சக்தி வாய்ந்தவைகளாம்.