கணபதி மந்த்ரம்
கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவீம் கவீனா முபமஸ்ர வஸ்தமம். ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத ஆ ந: ஸ்ரூண்வன்னூதிபீஸ்ஸீத ஸாதனம். -----யஜூர் வேதம்.
(தேவர் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே. உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுள் பேரறிஞர். ஒப்பற்ற புகழ்படைத்தவர். முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர். வேதங்களுக்கு நாயகர். எங்கள் பிராத்தனைகளைக் கேட்டு எங்களைக் காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக.)