Showing posts with label ஆளவந்தார். Show all posts
Showing posts with label ஆளவந்தார். Show all posts

Wednesday, October 15, 2014

நினைவுகள்-50


எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு சிறிய விஷயத்தில் ஏமாந்துவிடுவர்.
அதுபோலவே, எவ்வளவு பெரிய பலசாலியும் ஒரு சின்னவனிடம் தோற்றுவிடவும் நேரும்.
எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், ஒருநேரம் தனது ஒரு சொல்லைக் கேட்கக்கூட ஆள் இல்லாமல் இருப்பர்.
இது மனிதவாழ்வில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகள்தான்.
800 வருடங்களுக்கு முன்னரும் இது நிகழ்ந்துள்ளது.

ஆளவந்தார்.
இவருக்கு யமுனைத் துறைவர் என்றும் பெயர்.
மிகப் பெரிய அறிவாளி.
12 வயது சிறுவனாக இருந்தபோது, பாண்டிய சமஸ்தான வித்துவானாக ஆகிவிட்டார்.  பாண்டிய மன்னனின் பாதி நாட்டை போட்டியில் பெற்று அரசு செய்தவர்.
பாண்டிய மன்னனிடம் இருந்த ஒரு பண்டிதரைப் பார்த்து இந்த மூன்று கேள்விகளைக் கேட்கிறார்.
1. உமது தாய் புத்திரவதி அல்லள். (உன் தாய், குழந்தை பெற்றவள் இல்லை).
2. தர்மவான் பாண்டிய மன்னன், தர்மவான் இல்லை.
3. ராஜபத்தினி (ராணி, பாண்டியனின் மனைவி) பதி விரதை இல்லை.
இந்த மூன்று கேள்விகளையும் கேட்டு அதை உன்னால் நிரூபிக்க முடியுமா என்றும் கேட்கிறார். அதைக் கேட்ட அந்த வித்துவான் பேசாமல் இருக்கிறார்.
பாண்டிய மன்னன் குறுக்கிட்டு, இந்தச் சிறுவனைப் பார்த்து, 'நீ நிரூபித்தால், என் நாட்டில் பாதியைத் தருகிறேன்' என்கிறார்.
1. ஒரு பிள்ளை, பிள்ளையல்ல. ஒரு மரம் தோப்பாகாது. ஒரு முறை ஈன்ற வாழை, பின்னர் மலடி. அதுபோல, ஒரு பிள்ளை பெற்றவள், பின்னர் மலடிதானே. எனவே உன் தாய் புத்திரவதியல்லள்.
2. குடிகள் (குடிமக்கள்) செய்யும் பாவங்கள் அந்த அரசனையே சேரும். இது விதி. எனவே அரசன் தருமவானாய் இருக்க முடியாது.
3. மணப் பந்தலில், அக்கினி தேவன் முதலிய தேவர்களுக்கு முன்னால்அந்த மணப்பெண்ணை அவர்களிடம் சேர்த்து வைத்து, அதற்குப் பின்னரே, மணமகனுக்குக் கொடுக்கின்றனர்.  அப்படிப் பார்த்தால், அந்தப் பெண், தனது பதிவிரதை கொள்கைக்கு பங்கம் ஏற்பட்ட பின்னரே, மற்றொருவனுக்கு மனைவி ஆகிறாள். ஆதலால், அரசனின் மனைவி பதிவிரதை இல்லை.

இவ்வாறு கூறி, பாண்டிய மன்னனின் பாதி நாட்டைப் பெற்று ஆண்டதாகச் சொல்வர்.

இவ்வளவு அறிவானவரும், தெளிவானவரும் ஒருமுறை ஏமாந்துவிட்டார்.
இவரை மணக்கால் நம்பி என்னும் ஒரு வைஷ்ணவர், சந்தித்து, “உன் பாட்டனாரின் புதையலை உனக்கு காட்டுகிறேன் வா” என்று பொய் சொல்லி அழைத்துச் சென்று ஏமாற்றி விட்டார்.
ஏமாந்தவர், ஸ்ரீரங்கம் வருகிறார். அங்கு திருமாலைப் பார்க்கிறார். அவரைக் கண்டவுடன் துறவு பூண்டு, இனி விஷ்ணுவின் வழிபாடே எனது ராஜாங்கம் என்று வாழ்ந்தார்.
இது நடந்தது சுமார் 800 வருடங்கள் இருக்கும்.