Showing posts with label அமிர்தசாகர். Show all posts
Showing posts with label அமிர்தசாகர். Show all posts

Saturday, March 29, 2014

விதானமாலை

விதானமாலை
விதானமாலை என்பது ஒரு ஜோதிடநூல். ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும் ஒரு நியதி உண்டு என்றும், அதைச்செய்யும் போது உள்ள கோள்களின் இயக்கம், பஞ்சாங்க கணிதம் இவற்றைக் கொண்டு கணிக்கப்படுவது இது. இந்த நூலை சோழநாட்டு அமிர்தசாகரரின் புத்திரராகிய நாராயண சுவாமிகள் தமிழ்க்கவிகளால் யாத்துள்ளார்.

1-விதானமாலை (காப்பு)

பூமகள் கேள்வன்பொன் னைடையன் புட்கொடி யோன்புனித
னாமகள் கோனைத்தன் னாபியிற் றந்தவ னான்மறையின்
பாமய னச்சுதன் பங்கயந் கண்ணன்பஞ் சாயுதன்றாள்
சேமமன் றெண்ணியென் சிந்தையிற் சென்னியிற் சேர்த்துவனே.


(இலக்குமியின் நாயகரும், பீதாம்பரத்தை உடையவரும், கருடக் கொடியை உடையவரும், களங்கமற்றவரும், சரசுவதியின் நாயகனாகிய பிரமாவைத் தன் உந்திக் கமலத்தினின்று தோற்றுவித்தவரும், நான்கு வேதங்களின் வடிவானவரும், அழிவில்லாதவரும், செந்தாமரை மலர்போன்ற கண்களை உடையவரும், சங்கு, சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் பஞ்சாயுதங்களையும் உடையவருமாகிய நாராயணமூர்த்தியுடைய திருவடிகளை நான் நுதலிப் புகுந்த நூலுக்கு காவலாம் என்று நினைத்து, மனத்திலும் சிரசிலும் இருத்திக் கொள்வேன்.)