Showing posts with label அந்தச் சிலேட்டும் இந்தச் சிலேட்டும். Show all posts
Showing posts with label அந்தச் சிலேட்டும் இந்தச் சிலேட்டும். Show all posts

Thursday, August 14, 2014

நினைவுகள்-30

அந்தச் சிலேட்டும், இந்தச்  சிலேட்டும்:

1950-க்கு முன்னர் பிறந்தவர்கள் மிகக் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த எல்லா விஞ்ஞான மாறுதல்களையும் கண்ணால் கண்டு, அதை அனுபவித்த பாக்கியத்தை பெற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும். இதற்குமுன்,எந்த நூற்றாண்டிலும் வாழ்ந்த, எந்தத் தலைமுறையும் இப்படிப் பட்ட அனுபவத்தைப் பெற்றிருக்க முடியாது.

இந்தத் தலைமுறை மனிதன், கோவணம் கட்டிய அனுபவமும், மண்ணில், சிலேட்டில் பல்பம் என்னும் சிலேட்டுக் குச்சியைக் கொண்டு எழுதிய அனுபவமும், காலில் செருப்பு இல்லாத நடை கொண்ட அனுபவமும் கொண்டவன். அவனே, இன்றைக்கு, ஜீன்ஸ் பேண்ட் சகிதம், லாப்-டாப் (laptop), டேப் (Tab), ஷூ போட்டு, விமானப்பயணம், இன்டர்னெட் தொடர்பு போன்ற எண்ணிறைந்த அனுபவங்களை கொண்டிருக்கிறான்.

பழைய பேப்பரில் கடிதம் (கடுதாசி) எழுதிப் பழகியவன், இன்று ஈமெயில் அனுப்பி ரசிக்கிறான். என்னே அவன் அனுபவம்!! 

வேறு எந்தத் தலைமுறைக்கும் இப்படிப்பட்ட ஒரு இனிய அனுபவம் கிடைத்திருக்காது. 1960-70க்கு பின் பிறந்தவர்கள் இதில் இன்றைய விஞ்ஞான முன்னேற்றதை மட்டுமே பார்த்து வளர்ந்து, உபயோகித்து வருபவர்கள். அவர்களுக்கு சிலேட்டு பலகை தெரியாது. ஆனால் இன்றைய Slate தெரியும். இந்த சிலேட்டும் அந்த சிலேட்டும் தெரிந்தவர்கள் கடவுளின் செல்லப் பிள்ளைகள் தானே!!!

.