Thursday, January 27, 2022

Pari delicto principle பேரி டெலிக்டோ கொள்கை

 Pari delicto principle

1961-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு.

ஒருவர், தனக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு வழக்குப் போடுகிறார். 

அதை எதிர்பார்த்த கணவர், சிவில் கோர்ட்டில், அவருக்கும், 2-வது மனைவி என்று சொல்லப்படுவருக்கும் எந்த சட்டபூர்வ திருமணமும் நடக்கவில்லை என்று தீர்ப்புக் கேட்டு சிவில் வழக்குப் போடுகிறார்.

கீழ்கோர்ட், அவர் கேட்டபடி வழக்கை அவருக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்து விடுகிறது.

ஆனால், முதல் அப்பீல் கோர்ட்டில், அவரின் வழக்கை தள்ளுபடி ஆகி விட்டது. காரணம் - சட்ட முறைப்படி திருமணம் நடக்கவில்லை என்றாலும், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். கணவன், இந்த திருமணத்தை சட்டப்படி நடத்திக் கொள்ளவில்லை. அவரும் தவறி விட்டார். தன் தவறையே தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதே சட்டவிதி. அதையே Pari delicto principle (பேரி டெலிக்டோ கொள்கை) என்று சட்டம் சொல்கிறது.

பேரி டெலிக்டோ (Pari delicto) என்ற வார்த்தை ஒரு லத்தீன் வார்த்தை. இதன்படி, இருவருமே தவறி இழைத்த நிலையில் இருக்கும் போது, அதில் ஒருவர் மட்டும் அந்த தவறை, தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியாது என்பதே அதன் சாரம்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக சொல்லும் காலத்தில், இருதார மணத் தடை சட்டம் 1949 நடைமுறையில் இருந்த காலம். அந்த சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, மறு திருமணம் செய்ய முடியாது என்ற சட்டம் 1949-ல் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

பின்னர், 1955-ல் இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் வந்த பின்னர் 1949 சட்டம் ரத்து ஆகி விட்டது. 1955 சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, 2-வது மனைவியை திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்திருந்தால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்கிறது 1955 இந்து திருமணச் சட்டம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அவர் ஐகோர்ட்டுக்கு அப்பீல் வருகிறார்.

இங்கு, பேரி டெலிக்டோ கொள்கைப்படி, ஒருவர் தனது தவறை, தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், அந்தக் காரணத்துக்காகவே, அவர் இந்த 2-வது திருமணம் சட்டப்படி செல்லாது என்று கேட்பதை மறுத்து விடவும் முடியாது என்றும், 1955 இந்து திருமணச் சட்டம் பிரிவு 11-ல் அவ்வாறு நடந்த திருமணம் செல்லாது எனக் கேட்கும் உரிமை உள்ளது என்றும் சென்னை ஐகோர்ட் சொல்லி உள்ளது.

எனவே கணவர், தனது 2-வது திருமணத்தை செல்லாது எனக் கேட்கும் வழக்கை அனுமதித்து தீர்ப்பு கூறி விட்டது.

Refer: The Madras High Court in DKR Chinnaswamy Sah vs Rajamba Bai, AIR 1961 Mad 325 : (1961) 1 MLJ 381.

**


Wednesday, January 26, 2022

இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856

 இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856 

(The HIndu Widows’ Remarriage Act XV of 1856).

கோவிந்த படையாச்சி என்பவர் சொத்தை விட்டு விட்டு இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் உண்டு. இந்து கணவரின் சொத்தில் மனைவிக்கு ஆயுட்கால உரிமை உண்டு என்பதாலும், மகனும் இல்லை என்பதாலும், மனைவிக்கு அந்த சொத்துக் கிடைக்கிறது. ஆனால், அவள் அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கிரயத்துக்கு விற்று விடுகிறாள். பின்னர் சில காலம் கழித்து, வேறு ஒரு ஆடவரைத் திருமணம் செய்து கொள்கிறார். 

இப்போது, படையாச்சியின் மகள், “தந்தையின் சொத்தில், தாய்க்குப் பின்னர் தனக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமை உள்ளது. ஆனால் அதை அவளின் தாய் விற்று விடுவதால், அந்த கிரயம் செல்லாது என்றும், தனக்கு உரிமை உள்ளது என்றும், தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால், அவளுக்கு கணவர் சொத்தி்ல் கிடைக்கும் உரிமையை இழந்து விடுகிறார் என்றும் சொல்லி, 1955-ல் சிவில் வழக்குப் போடுகிறார். 

அதை ஏற்றுக் கொண்ட முன்சீப் கோர்ட், மகளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்குகிறது. சொத்தை கிரயம் வாங்கியவர் அந்த தீ்ர்ப்பை எதிர்த்து 1957-ல் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அதுவும் கீழ்கோர்ட், தாய் கிரயம் செல்லாது என தீர்ப்பு கொடுத்தது சரியே என்றும், ஆனால், அவரின் தாய், மறு திருமணம் செய்தது Madras Act VI of 1949 படி செல்லாத திருமணம் என்றும் எனவே, மகள், அந்த சொத்தை திரும்ப கேட்க முடியாது என்றும் தீர்ப்புச் சொல்லி விட்டது.

அதை எதிர்த்து, மகள், சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். Madras Act VI of 1949 நடைமுறைக்கு வந்த தேதி 23-3-1949. 1949 சட்டம் என்பது இருதார தடை சட்டம். அப்போது புதுக் கணவருக்கு ஏற்கனவே மனைவி உயிருடன் இருக்கிறாள். ஆனால், தாயும், அவளின் புதுக் கணவரும் மறு திருமணம் செய்து கொண்டது ஏப்ரல் 1949-ல். அதாவது 1949 சட்டம் வந்த பின்னர். ஆனாலும், சாட்சிகள் யாரும் சரியான தேதியைச் சொல்லவில்லை. இருந்தாலும், 1949 சட்டம் வந்தபின்னரே இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்றே கீழ்கோர்டுகள் முடிவுக்கு வந்துவிட்டன. 

எனவே, இறந்தவரின் மனைவி மறுதிருமணம் செய்து கொண்டால், கணவரின் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது. அதிலும், மனைவிக்கு கணவரின் சொத்தில் ஆயுட்கால உரிமை மட்டுமே இருக்கிறது. அதை அவள் கிரயம் செய்தாலும், அந்தக் கிரயம் அவளின் ஆயுட்காலம் வரை மட்டும் செல்லுபடியாகும். மனைவிக்கு கணவரின் சொத்தில் முழு உரிமை கிடையாது. எனவே மனைவியின் ஆயுட்காலத்துக்குப் பின்னர் அந்த சொத்து கணவரின் வாரிசுகளுக்குத் திரும்ப வந்து விடும். 

ஆனால் இந்த வழக்கில், தாய், மறுதிருமணம் செய்த போது, அவளின் புதுக் கணவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடன் இருக்கிறாள். எனவே 1949 சட்டப்படி, இந்த மறுதிருமணம் செல்லாது. 1856 சட்டமான விதவைகள் மறு திருமணச் சட்டம் என்பது சட்டபூர்வமாக நடந்த விதவைகள் திருமணம் மட்டுமே. இங்கு அவ்வாறு நடக்கவில்லை. 

எனவே, மகள் அவளின் சொத்துரிமையை கேட்க முடியாது என்று சென்னை ஐகோரட் தீர்ப்பு சொல்லி விட்டது.

Refer: Madanavalli alias Sowbagyammal vs. Thangavelu Padayachi and others, AIR 1961 Mad 298 : (1961) 1 MLJ 140. 

**


Sunday, January 2, 2022

கச்சிமேமன், கோஸா முகமதியர் வழக்கம்:

கச்சிமேமன், கோஸா முகமதியர் வழக்கம்:

கச்சி மேமன் என்பவர்கள் கட்ச் பகுதியில் வசித்த இந்துக்கள். இவர்கள் பல காலங்களுக்கு முன்னரே முகமதிய மதத்துக்கு மாறி விட்டார்கள். இருந்தாலும், பழைய இந்து பழக்க வழக்கங்கள் சிலவற்றைப் பின்பற்றி வருகின்றனர். இதில் சொத்தில் உரிமை கோருவது இந்து வழக்கப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியென்றால், அவர்கள் இந்து கூட்டு குடும்ப முறைப்படி சொத்தை அடைய முடியுமா என்ற சட்டக் கேள்வி 1920-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கில் ஏற்படுகிறது. கச்சு பகுதியில் இருந்த மேமன் வகை மக்கள், படிப்படியாக, பிரிந்து மேற்கு கடற்கரை வரை பரவி வாழ்ந்து வந்தனர். மலபார் பகுதியிலும், பெங்கால் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் முந்தைய வரலாற்றின் படி, அவர்கள் லோனாஸ் Loannas என்னும் இந்து வியாபார சாதியான வைசிய சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவைகளை எல்லாம் உறுதி செய்யப் போதுமான ஆவணங்களோ, பதிவுகளோ இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. 

இதேபோலவே, கோசாஸ் Khojahs என்ற முகமதியர்களும் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தனர் என்றும், அவர்களும் அதே இந்து பழக்க வழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. எனவே கச்சு மேமன்ஸ் மற்றும் கோசாஸ் ஆகிய இரு பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான முறைகளே இருந்தன. ஆனால், இந்து சாஸ்திர சட்டமானது அவர்களுக்கு எவ்வளவு தூரம் பொருந்தி வரும் என்று தெரியவில்லை. 

ஆனால், இதைப் பற்றி முதன் முதலில் 1847-ல் ஒரு வழக்கு வந்துள்ளது. அது Hirbae vs Sonabae; Rahimatbae vs Haji Jussap; and the case of Khojas and Memons (1847) Perry’s O.C. 110 at pp 115, 128 : 4 Ind. Dec. (O.S.) 100 at p.105. இந்த வழக்கின் முடிவு 1847ல் சொல்லப்பட்டது. அதில் கோசாஸ், மற்றும் கச்சி மேமன் முகமதியர்களின் சொத்தின் வாரிசு உரிமைகளில், முகமதிய சட்டத்திலும் மாறுபட்டு உள்ளது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. Sir Erskine Perry C.J. என்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், கச்சி மேனன் மக்களில், இந்துக்களைப் போலவே, பெண்ணுக்கு சொத்துரிமை கொடுக்கவில்லை என்ற நிலை இருந்ததாகக் கூறுகிறார். ஆனாலும், குரானுக்கு எதிராக ஒரு வழக்கம் (custom) இருக்குமானால், அது செல்லாது என்பது குரானில் சொல்லி உள்ளது. ஆனாலும், அவர் ஒரு முடிவுக்க வருகிறார். “ஒரு வழக்கத்தை, கிழக்கத்திய நாட்டினர் (பிரிட்டீஸ் அல்லாதவர்) தொடர்ந்து கடைப்பிடிக்கப் பட்டு வந்தால், பிரிட்டீஸ் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ் அதை ஏற்றுக் கொள்கிறது” என்கிறார். ஆனால் அது சட்டத்தை மீறியதாக இருக்க கூடாது என்கிறார். எனவே அந்த வழக்கில் ஒரு முகமதியப் பெண், சொத்துரிமை கேட்பதை மறுத்து விடுகிறார். அவ்வாறு பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமல், கச்சு மேமன், கோசாஸ் மக்களிடம் இருக்கும் வழக்கமானது பல காலமாக பின்பற்றி வரும் வழக்கம் என்பதால், அதை மறுக்கிறார். 

மற்றொரு வழக்கான Gangbai vs Tavar Mulla, 1 BHCR 71 என்ற வழக்கில், ஒரு கோஸா முகமதியப் பெண் தனது சொத்துக்களை சாரிட்டியாக (தர்மமாக) தனது உயிலில் எழுதி வைத்ததை சட்டப்படி செல்லாது எனத் தீர்ப்பு கூறி உள்ளது. தலைமை நீதிபதி Sausse CJ தனது தீர்ப்பில், “கோஜா சாதியினர், முகமதிய மதத்தை பின்பற்றி வந்தாலும், சொத்துரிமையைப் பொருத்து அவர்கள் இந்து மதச் சொத்து வாரிசுரிமையையே பின்பற்றி வந்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார். 

மற்றொரு வழக்கான, Mulbai BHCR 276 page 284 என்ற வழக்கில், 1866-ல் கூறியுள்ள தீர்ப்பில், ஒரு கோஷா பெண்மணி வாரிசு இல்லாமல் இறந்து விடுகிறார். அவரின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை அவளின் சகோதரன், கோர்ட்டில் Letters of Administration கேட்கிறார். அதில், அந்த இறந்த பெண்மணி, அந்த சொத்தை, அவளின் இறந்த கணவரிடமிருந்து வாரிசாகப் பெற்று இருப்பதால், அவளின் இறப்புக்குப் பின்னர் அந்தச் சொத்து அவளின் கணவரின் வாரிசுகளையே சேரும் என்றும், அவளின் உறவுகளான அவளின் சகோதரனுக்குப் போகாது என்றும் தீர்ப்பு உள்ளது. இது குரானுக்கு எதிரானதாக இருந்த போதும், தொடர் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இருப்பதால், அதுவும் சட்டத்துக்கு புறம்பாக இல்லாததால் கோர்ட் அதை ஏற்கிறது என்று சொல்லி உள்ளது. 

எனவே, கோசாஸ் இனத்தவர், இந்து சட்ட திட்டங்களின்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஏற்க முடியாது. ஆனால், அவர்கள் தானாகவே ஒரு பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி அதன்படி நடந்து வருகின்றனர். எனவே அவர்களை இந்துக்கள் என்றோ, இந்து சட்டப்படி நடக்கின்றனர் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. கோசாஸ் இன மக்கள், இந்துக்கள் கடைப்பிடிக்கும் நடை முறைகளை, அவர்களும் கடைப்பிடிக்கிறார்கள் அவ்வளவே. மற்ற விஷயங்களில் அவர்கள் முகமதியர்களாகவே இருந்து வருகின்றனர். 

மற்றொரு வழக்கான Shivaji Hasam vs Datu Mavji Kohja 12 BHCR 281 pp.202 என்ற வழக்கானது 1847-ல் நடந்த வழக்கு. இதில், பழக்க வழக்கத்தை நிரூபிக்க போதிய சாட்சியம் இல்லை என்றாலும், அவர்கள்/ கோஸா முகமதியர்கள், இந்துக்களின் பழக்க வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சொத்துரிமை வைத்துள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புச் சொல்லி உள்ளனர். கோஸா முகமதிய குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருக்க, அதில் மூத்தவர் மற்றவர்களுக்கு கார்டியனாக இருந்தது செல்லும் என்று சொல்லி உள்ளது. இது இந்து முறைப்படியான கூட்டுக் குடும்பத்தில் அவ்வாறு மூத்தவர் குடும்பத் தலைவராக இருப்பார் என்பதை ஒத்து இருக்கிறது. 

எனவே மதராஸ் பிரசிடென்சியில் அதுவரை கோர்ட்டுகள், கோஸா முகதியர்கள், இந்து வாரிசு உரிமை முறையை பின்பற்றி அதே போன்ற பழக்க வழக்கத்தை கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 

மற்றொரு வழக்கான Rahimbhai Allubhai Hirabhai vs Gorbai, 12 BHCR 294 at page 304, என்ற வழக்கு 1875-ல் நடந்த வழக்கு. இதில், ஒரு கோஸா வியாபாரி சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். அவருக்கு ஒரு மனைவி, தாய், மற்றும் திருமணம் ஆன ஒரு சகோதரி இருந்தனர். தீர்ப்பில், கோஸா பழக்க வழக்கப்படி, தாய் இந்த சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை பெறுவார் என்றும், அவர், இறந்தவரின் மனைவி, சகோதரி, இவர்களை விடவும் முன்னுரிமை பெற்றவர் என்றும் தீர்ப்பு உள்ளது. 

மற்றொரு வழக்கான Rahmatbai vs Hirbai, 3 B.34 : Ind. Dec.(N.S.) 23 என்ற வழக்கில் தீர்ப்பு 1877-ல் வந்தது. அதில், குழந்தை இல்லாமல் இறந்த கோஸா முகமதியருக்கு, அவரின் விதவை மனைவி, மற்றும் சகோதரி வாரிசாக வர முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதில், பழக்க வழக்கம் ஏதும் இல்லாதபோது, இந்து வாரிசு உரிமையை இங்கு கொண்டு வரலாமா என்ற கேள்வி எழுந்தது. 
**

Saturday, January 1, 2022

புரோநோட்டின் காலக் கெடு


புரோநோட்டின் காலக் கெடு 

புராமிசரி நோட்டு எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?

ஒரு புராமிசரி நோட், அது எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மூன்று வருடம் முடிந்து விட்டால், அந்த புரோநோட் செல்லாது என்பதால், அதைக் கொண்டு அந்தப் பணத்தை வசூல் செய்ய வழக்குப் போட முடியாது என்று இந்திய லிமிடேஷன் சட்டம் 1963 சொல்கிறது.

அப்படி மூன்று வருடம் முடியப் போகும் புராமிசரி நோட்டை உயிர் உண்டாக்க வேண்டும் என்றால், அதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளதாக இந்திய லிமிடேசன் சட்டம் 1963 சொல்கிறது.

முதல் முறை:

ஆனாலும், அந்த மூன்று வருடங்களுக்குள், அந்த புரோமிசரி நோட்டை எழுதிக் கொடுத்தவர் (கடன் வாங்கியவர்) அந்த புரோநோட் கடனுக்காக ஏதாவது ஒரு அசல் தொகை அல்லது ஏதாவது ஒரு வட்டித் தொகை செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்டது என்று அந்த புராமிசரி நோட்டில், அல்லது அதன் பின்பக்கத்தில் எழுதி தேதியுடன் கையெழுத்துப் போட்டால், அந்தத் தேதியிலிருந்து மேலும் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும். இப்படியாக எத்தனை முறை வேண்டுமானாலும் தொடரலாம்.

இரண்டாவது முறை:

மற்றொரு முறையாக, அந்த புரோநோட்டுக்கு பகுதி அசல் தொகையோ, அல்லது பகுதி வட்டித் தொகையோ செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தால், அதற்கும் ஒரு மாற்று வழியாக, ஒரு ஒப்பு உறுதிச் சீட்டு என்னும் Acknowledgment of Liability என்ற உறுதிமொழியை எழுதிக் கொடுக்கலாம். அந்த உறுதிமொழியானது, அந்த புரோமிசரி நோட்டுக்கு, இதுநாள் வரை இவ்வளவு தொகை பாக்கி உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்று அன்றைய தேதியிட்டு கையெழுத்துச் செய்து எழுதிக் கொடுக்க வேண்டும். அந்த புரோ நோட்டில் அதை எழுதத் தேவையில்லை. அதற்குப் பதிலாக தனியாக ஒரு கடிதம் கொடுத்தால் போதும். அப்படிக் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து மேலும் மூன்று வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.

இதில் முதல் வகையை லிமிடேசன் ஆக்ட் 1963-ல் பிரிவு 19 சொல்கிறது. (இதில் கடனில் ஒரு சிறு தொகையை, அசலுக்காகவோ அல்லது வட்டிக்காகவே கொடுத்து, (Payement towards either part of principal money or part of interest due) காலத்தை நீட்டித்துக் கொள்வது). வெறும் 10 ரூபாய் கொடுத்தால்கூடப் போதுமானது.

இரண்டாம் வகையை அதே சட்டத்தின் பிரிவு 18 சொல்கிறது. (இதில் பணம் ஏதும் கொடுக்காமல், கடன் பாக்கியாகவே உள்ளது ஒப்புக் கொண்டு ஒப்புகை உறுதிமொழி (Acknowedgement of debt) எழுதிக் கொடுத்து, காலத்தை நீட்டித்துக் கொள்வது).

ஒரு குழப்பமான வழக்கு:

இந்த வழக்கு 1936-ல் நடந்த வழக்கு. இதில் ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கு புராமிசரி நோட் எழுதிக் கொடுத்திருக்கிறார். பின்னர் அசல் தொகை முழுவதும் கொடுத்து விட்டார். அதுவரை கொடுக்க வேண்டிய வட்டித் தொகை ரூ.200 வருகிறது. அதை அவரால் அன்று கொடுக்க முடியவில்லை. எனவே அந்த வட்டித் தொகைக்கு தனியே ஒரு புராமிசரி நோட் எழுதிக் கொடுக்கிறார்.  ஆனாலும் அந்த வட்டித் தொகையை கொடுக்க முடியவில்லை.

பணம் கொடுத்தவர் வழக்குப் போடுகிறார். கடன் வாங்கியவரின் வாதம் என்னவென்றால், இந்த வட்டிப் புரோநோட்டில் நான் பணம் ஏதும் வாங்கவில்லை. வட்டிக்காக எழுதிக் கொடுத்தது. ஆனால் அசல் வாங்கிய புரோநோட்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், அந்த புரோநோட் காலாவதி ஆகிவிட்டது. எனவே வட்டிப் புரோநோட், லிமிடேசன் சட்டம் 1963-ன் பிரிவு 18-ன்படி Acknowldgement of liability என்னும் கடன் ஒப்புகை உறுதிமொழி ஆகாது என்று வாதம் செய்கிறார்.

ஏனென்றால், அந்த வட்டிப் புரோ நோட்டில், பழைய புரோ நோட் கடன் பாக்கி உள்ளது என்று ஒப்புகை செய்திருந்தால்தான், அது லிமிடேசன் சட்டம் பிரிவு 18-ன்படி ஒப்புகை ஆகும். ஆனால் இங்கு வட்டிக்கு எழுதிக் கொடுத்த புரோ நோட்டு, ரூ.200 பணம் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பழைய பாக்கி கடனாக இருக்கிறது என்று சொல்லி ஒப்புதல் உறுதிமொழி  (Acknowledgment of liability) ஏதும் அதில் எழுதிக் கொடுக்கவில்லை. எனவே இந்த வட்டிப் புரோ நோட் பிரிவு 18-ன் படி கடனின் காலத்தை நீட்டிக் கொடுக்காது. (அதாவது வட்டிப் புரோ நோட் மூன்று வருடங்களுக்கு உள் இருந்தாலும், அது பழைய புரோ நோட்டுக்கு எழுதிக் கொடுத்திருப்பதால், அதற்கு கால நீட்டிப்பு இல்லை என்று வாதம் செய்கிறார்.

இந்த 1963 லிமிடேசன் சட்டம் வருவதற்கு முன்னர் பழைய லிமிடேசன் சட்டம் நடைமுறையில் இருந்தது.  

முதன் முதலில் வந்த லிமிடேசன் சட்டம் Act XIV of 1859.

பின்னர் வந்த சட்டம் Act XIX of 1871.

இதைத் தொடர்ந்து வந்த சட்டம் Act 1877.

அதைத் தொடர்ந்து வந்த சட்டம் Act 1908

தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் 1963

இந்த வழக்கு 1936-ல் நடந்த வழக்கு. எனவே 1908 வருட லிமிடேசன் சட்டம் அப்போது நடைமுறையில் இருந்தது.

இதே பிரச்சனை போன்று மதராஸ் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. Muthiah Chettiar v. Kuttayan Chetty, (1917) 6 LW 790. இதில், புரோ நோட்டின் பாக்கிப் பணத்துகாக உண்டி சீட்டு எழுதி வாங்கிக் கொள்ளப்பட்டது. இதில் தீர்ப்பாக, உண்டி எழுதிக் கொடுத்தது, லிமிடேசன் சட்டம் பிரிவு 20-ன்படி பணம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கருத முடியாது என்று சொல்லி விட்டது.

மதராஸ் ஐகோர்ட்டின் மற்றொரு வழக்கான Mackenzi v. Thiruvengadathan, (1886) ILR 9 Mad 271 என்ற வழக்கில் Justice Muthusamy Aiyar and Justice Brandt இருவரும், to the effect that the writing must show that the payment was made towards the debt in question… என்று சொல்லி உள்ளார்கள்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வட்டிக்கு எழுதிக் கொடுத்த புரோ நோட், அது பழைய புரோநோட் கடனில் பாக்கி உள்ளது என்று தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அவ்வாறு சொல்லப் படவில்லை.

ஆனாலும், கடன் கொடுத்தவரின் வாதம் என்னவென்றால், பழைய புரோ நோட் கடனை தீர்த்து விட்டார். அதில் வட்டிப் பாக்கியை வட்டிப் புரோ நோட் எழுதிக் கொடுத்து தீர்த்து விட்டார் என்று தான் கருத வேண்டும். எனவே வட்டிப் புரோ நோட் தனியே இயங்கும் என்று வாதம் செய்கிறார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், இந்த வட்டிப் புரோ நோட் காலதாமதம் ஆகவில்லை என்றும், அந்தப் பணம் கொடுக்க வேண்டிய பணம் தான் என்று தீர்ப்பு சொல்லிவிட்டது.


**


 

Wednesday, September 29, 2021

Noscitur a Sociis நோசிட்டர் சோசிஸ்

Noscitur a Sociis 

நோசிட்டர் சோசிஸ்


ஒரு சட்டத்தில் ஒரு வார்த்தை குழப்பமாக இருந்தால், அந்த வார்த்தையை சுற்றி உள்ள வார்த்தைகளைக் கொண்டு அந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இது கோர்ட்டில் நீதிபதி ஒரு சட்டத்தில் உள்ள வார்த்தைக்கு பொருள் கண்டுபிடிக்க ஏற்படுத்தி உள்ள முறை ஆகும்.


Noscitur a Sociis என்றால் the meaning of an unclear word or phrase is determined by the words immediately surrounding it. 


ஒரு சட்டத்தில் ஒரு வார்த்தை எதைக் குறிக்கிறது என்று தெரியாமல் இருந்தால், அந்த வாக்கியத்தில், அல்லது அந்த சட்டத்தில் உள்ள மற்ற வாக்கியங்களைக் கொண்டு அதற்கு பொருள் கண்டு கொள்ளலாம் என்று சொல்கிறது.


இதை வேடிக்கையாக Birds of a feather flock together என்று கூறுகிறார்கள். ஒரு இறகைக் கொண்டு அந்த பறவையின் இறக்கையை முடிவு செய்யலாம்.


மந்தையில் உள்ள ஒரு மாட்டைக் கொண்டு அது மற்ற மாடுகளை இனம் காணலாம் என்பதே இதன் பொருள். அதுபோல, அந்த மாடு, எந்த மந்தையில் இருக்கிறதோ அந்த இனத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கலாம் என்பதே இந்த நோசிட்டர் சோசிஸ் என்பதன் பொருள்.


இதே போல மற்றொரு வார்த்தையும் உண்டு. அது Ejusdem generis. அதன் பொருள், அதே வகையைச் சேர்ந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது ஒரு சட்டத்தில், பல பொருள்களைச் சொல்லி இருந்தால், அது போன்ற மற்ற பொருள்களும் சேரும் என்று பொருள். 

உதாரணமாக - ஒரு சட்டத்தில், ஆட்டோமொபைல், டிரக்குகள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் மோட்டர் மூலம் ஓடும் வாகனங்கள் என்று சொல்லி இருந்தால், அது போன்ற வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக, விமானமும் மோட்டர் மூலமே இயங்குகிறது என்று அதை எடுத்துக் கொள்ள கூடாது. ஒரே வகையைச் சேர்ந்தவைகளை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொருள். 


ஒரு சட்டத்துக்கு அல்லது அதில் உள்ள ஒரு பிரிவுக்கு பொருள் கொள்ளும்போது, கோர்ட், அதில் சொல்லி உள்ள வார்த்தைகளை அதன் சாதாரண பொருளிலேயே முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதே சட்ட மரபு. அதில் குழப்பம் இருந்தால் மட்டுமே இவ்வாறான விளக்கங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. 

**





Tuesday, September 28, 2021

Fiduciary person நம்பகத்தன்மை கொண்டவர்

Fiduciary person
நம்பகத்தன்மை கொண்டவர்
(சட்டத்தால் நம்பகத் தன்மை கொண்டவராக கருதப்படுபவர்)

இப்படிப்பட்ட நம்பகத்தன்மை கொண்டவரின் செயல், தன்னை நம்பியவரை கைவிடக் கூடாது என்பதே சட்டம். 

Indian Trust Act 1882:
இந்திய டிரஸ்ட் சட்டம் 1882-ன் பிரிவு 88-ல் யார் யார், யார் யாருக்கு, நம்பகத்தன்மை கொண்டவராக (Fiduciary relationship) இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது.

ஒரு டிரஸ்ட்டி (Trustee), அதன் பயனாளருக்கு (Beneficiary) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

கார்டியனாக இருப்பவர் (Guardian), அவரின் மைனருக்கு (ward) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஒரு எக்சிகியூட்டர் (Executor), தனது லிகேட்டிக்கு (Legatee) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். உயிலை நிறைவேற்றுபவர் எக்சிகியூட்டர், அந்த சொத்தை அடைபவர் லிகேட்டி. 

ஒரு பார்ட்னர், மற்றொரு பார்ட்னருக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஒரு ஏஜெண்ட், தனது பிரின்சிபலுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஒரு கம்பெனியின் டைரக்டர், அந்த கம்பெனியின் ஷேர் ஹோல்டர்களுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஒரு வக்கீல், தனது கட்சிக்காரருக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

உதாரணமாக:

ஒரு உயிலை, அதன் எக்சிகியூட்டர் நிறைவேற்றுவதற்காக, அந்த சொத்தை பெறுபவரிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி விடுகிறார். அது தவறு. அவரை நம்பியதால், அவர் ஏமாற்றி குறைந்த விலைக்கு வாங்கி விட்டார். வித்தியாசப் பணத்தை கொடுக்க வேண்டும். 

ஒரு டிரஸ்ட்டில் உள்ள சொத்தை, ஒரு டிரஸ்ட், தன் சொந்த வியாபாரத்துக்கு பயன்படுத்தி நன்மை அடைகிறார். அதன் பலனை பயனாளிகளுக்கு கொடுக்கவில்லை. அது தவறு. அந்த பணம் பயனாளிக்கு சேர வேண்டும்.

ஒரு டிரஸ்டி, தான் பதவி விலகி விடுவதாகவும், அதற்கு பலனாக, அடுத்து வரும் டிரஸ்டியிடம் பணம் பெற்றுக் கொள்கிறார். இது தவறு. அந்த பணம் டிரஸ்டுக்கு சேர வேண்டும். 

ஒரு பார்ட்னர், பார்ட்னர்ஷிப் வியாபார பணத்தைக் கொண்டு, தன் பெயரில் ஒரு சொத்தை வாங்கி விடுகிறார். இது தவறு. அந்த சொத்து, பார்ட்னர்ஷிப் கம்பெனியின் சொத்து ஆகி விடும்.

இருவர் பார்ட்னர்ஷிப் வியாபாரம் நடத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் இறந்து விடுகிறார். பார்ட்னர்ஷிப் சட்டப்படி இந்த நிறுவனத்தை கலைத்து விட வேண்டும் (winding up the partnership business). ஆனால் உயிருடன் இருக்கும் பார்ட்னர் மட்டும் அந்த வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது தவறு. இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அதில் பங்கு உண்டு. 

ஒரு பிரின்சிபல் ஒரு சொத்தை வாங்குவதற்காக, தனது ஏஜெண்டை நியமிக்கிறார். ஆனால் அந்த ஏஜெண்ட், அந்த சொத்தை தன் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொள்கிறார். இது தவறு. நம்பகத்தன்மையை மீறி விட்டார். அப்போதும், அந்த சொத்து, பிரின்சிபலுக்கு சேர வேண்டிய சொத்துத்தான். ஏஜெண்ட் அனுபவிக்க முடியாது. 

ஒரு கார்டியன், தனது மைனருக்காக அவரின் சொத்தை விற்க நினைக்கிறார். ஆனால், அந்த சொத்தை குறைந்த விலைக்கு தானே தன் பெயரில் வாங்கிக் கொள்கிறார். இது தவறு. மீதி உள்ள பணத்தை அந்த கார்டியன் கொடுக்க வேண்டும்.

ஒரு வக்கீல், தனது கட்சிக்காரரின் சொத்த கோர்ட் ஏலத்துக்கு வரும்போது, அதில் கலந்து கொண்டு, குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து விடுகிறார். இது தவறு. கோர்ட் ஏலத்துக்கு வராமல் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர், அந்த சூழ்நிலையை பயன்படுத்தி, தனக்கு லாபம் தேடுவது தவறு. அப்படி வாங்கியது செல்லாது. 









Monday, September 27, 2021

WIll Probate in Common Form and in Solemn Form:

WIll Probate in Common Form and in Solemn Form:

In English practice, a testament may be proved in two ways, either in common form or in solemn form. 

COMMON FORM:

When it is sought to be proved in common form, the executor merely presents the Will before the Judge, and without citing the parties interested, produces the proof affidavits of one or more of the attestors to the will.

And the Judge, after satisfying himself on foot of the affidavits that the testament exhibited is true, proceeds to annex his probate and seal it to the Will.

 The grant of probate in common form leads to pernicious results. 

Several cases on the Original Side of the High Court where decades after the grant of the Probate, interested persons have applied for and succeeded in obtaining revocation of the Probate granted on the ground that the Will is ungenuine or had not been executed in a sound disposing state of mind.

But by the time the revocation is sought, most of the contemporaneous evidence relating to the will would have disappeared and the grantee of the probate would have wrought irremediable mischief by acting upon the grant, which whether granted in common form or solemn form operates in rem. 

SOLEMN FORM:

On the contrary, when the Will is to be proved in solemn form, the widest publicity is given to the proceedings and all parties, who have an interest in the subject-matter of the proceedings, appear in court and furnish valuable contemporaneous evidence which enables the court to render justice. 

The English practice of proof of wills in common form is not only unsuitable for Indian conditions but also contrary to the requirements of the Indian Succession Act.
**




உயில் புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு.

உயில் புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு.

Will Probate in Common Form
Will Probate in Solemn Form

ஒருவர் தனது சொத்துக்களை தன் வாழ்நாளுக்குப் பின்னர் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவருக்கு உயில் எழுதி வைத்து விட்டுப் போகலாம். 

உயில் எழுதுவதற்கு பத்திரம் தேவையில்லை. அந்த உயிலை பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இரண்டு சாட்சிகள் மட்டும் கையெழுத்துப் போட்டு, ஒரு உயில் எழுதப் பட்டிருந்தால், அது போதும்.

ஆனால், சென்னை மாநகரத்தில் உள்ள அசையாச் சொத்தைப் பொறுத்து ஒரு உயில் எழுதி இருந்தாலும், அல்லது சென்னை அல்லாத வேறு இடத்தில் உள்ள சொத்தைப் பொறுத்து சென்னையில் அந்த உயிலை எழுதி இருந்தாலும், அந்த உயிலை, அவரின் ஆயுட்காலத்துக்குப் பின்னர், சென்னை ஐகோர்ட்டில் புரபேட் என்னும் ஆர்டர் பெற வேண்டும். புரபேட் என்பது, அந்த உயில் உண்மையில் அவர் எழுதிய உயில் தானா என்றும், நல்ல மனநிலையில் அப்போது இருந்தாரா என்றும், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் எழுதப்பட்ட உயில்தானா என்றும் விசாரித்து, பின்னர் கொடுக்கப்படும் உத்தரவு ஆகும். புரபேட் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட என்று பொருள் கொள்ளலாம். (Probate means Proved).

சென்னை தவிர மற்ற இடங்களில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து எழுதிய உயிலை, புரபேட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும், அந்த மாவட்ட கோர்ட்டில் புரபேட் செய்து கொள்ளலாம்.

புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு:
ஒன்று - சாதாரண புரபேட் முறை, மற்றொன்று சட்டபூர்வ முறை.
Common Form of Probate
Solemn Form of Probate

சாதாரண புரபேட் முறை: 
Will Probate in Common Form:

இதில் உயில் எழுதியவர் இறந்தவுடன், அந்த உயிலை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து, வேறு யாருக்கும் எந்த நோட்டீஸ் கொடுக்காமல், அதில் உள்ள சாட்சிகளை மட்டும் விசாரித்து, புரபேட் உத்தரவு கொடுப்பது. 

இதில், இந்த உயிலை யாராவது மறுக்கவோ, போலியாக எழுதியதாக தயாரித்து உயில் என்று சொல்லவோ வழி இல்லை. எப்போதாவது அந்து உயில் வெளியில் வந்தால், அப்போதுதான் தெரியும். அதன் பிறகே, சம்மந்தப்பட்டவர் கோர்ட்டுக்கு சென்று இந்த உயில் புரபேட் ஆர்டர் தவறாக கொடுக்கப் பட்டது என்று அதை ரத்து செய்ய முடியும். 

சட்டபூர்வ புரபேட் முறை:
Will Probate in Solemn Form:

இதில் உயில் எழுதியவர் இறந்தவுடன், அந்த உயிலை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து, அந்த உயில் எழுதாமல் விட்டிருந்தால், அந்த சொத்துக்கு யார் யார் வாரிசாக வருவார்களோ, அவர்களை எல்லாம் எதிரப் பார்ட்டியாக சேர்த்து, அவர்களுக்கும் கோர்ட் சம்மன் அனுப்பி, அவர்களின் எதிர்ப்பையும் கேட்டு, மேலும், செய்தித் தாள்களி்ல் விளம்பரம் செய்து, யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்டு, பின்னர் முறைப்படி புரபேட் உத்தரவு கொடுப்பது.

இதில் அந்த உயிலை புரபேட் செய்யும் போதோ உலகத்துக்கு தெரியப்படுத்தி புரபேட் உத்தரவு வாங்குவது. இப்படி வாங்கி விட்டால், பின்நாளில், யாரும் அந்த உயிலை ஆட்சேபனை செய்ய முடியாது. 

இங்கிலாந்து சட்டம் & இந்திய சட்டம்:
இங்கிலாந்து சட்டப்பபடி, இந்த இரண்டு முறைகளும் இருந்தாலும், பொதுவாக இங்கிலாந்தில், சாதாண புரபேட் முறையிலேயே புரபேட் வாங்கி விடுவர். 

இந்தியாவிலும் அவ்வாறான சாதாரண புரபேட் முறையே நடைமுறை இருந்தது. இது பல சிக்கல்களை பின்னாளில் கொண்டு வந்ததால், இந்திய கோர்ட்டுகள் இப்போது, ச்ட்டபூர்வ புரபேட் முறைக்கு மாறி விட்டது.

**



Saturday, September 25, 2021

Issuance of Patta does not confer any title to immoveable property

Issuance of Patta does not confer title to an immovable property:

In Kuppuswami Nainar v. The District Revenue Officer, Thiruvannamalai and others, 1995 (1) MLJ 426 a Bench of the Madras High Court has held as follows:

"Revenue Officers in a patta proceedings may express their views on the question of title, but such expression of opinion or decision is not conclusive and it is only intended to support their decision for granting patta. 

Ultimately, it is the civil court which has to adjudicate the question as to whether the person claiming patta is the title-holder of the land. 

Even if the revenue authorities decide the question of title, that will not in any way affect the jurisdiction of the civil court, which has to decide the question without reference to the decision of the revenue authorities."

Koor Chit கூர் சீட்டு என்னும் பாகப் பத்திரம்:

Koor Chit

கூர் சீட்டு என்னும் பாகப் பத்திரம்:

பொதுவாக சொத்துக்களைப் பாகம் செய்து கொள்ளும்போது, வாய்மொழியாகவும், அல்லது எழுத்து பூர்வமாகவும் பாகம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.


பாகப் பிரிவினை என்பது இருக்கும் சொத்தை பாகங்களாக பிரித்துக் கொள்வதால், அது ஒரு "சொத்து மாற்றம் இல்லை" (Not a Transfer of Property) என்பதால், அதை வாய்மொழியாகவும் பாகம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. 


விவசாய நிலங்களை வாய்மொழியாகவே பாகம் செய்து கொள்கிறார்கள். எனவே ஒரு குடும்பத்து நிலங்களை பஞ்சாயத்துதாரர்கள் முன்னிலையில் முதலில் பாகமாகப் பிரித்துக் கொள்வர். பின்னர் வேறு ஒரு நாளில், அவ்வாறு ஏற்கனவே பிரித்துக் கொண்ட சொத்துக்களை அவரவர் பாகம் இது என்று ஒரு சீட்டில் எழுதிக் கொள்வர். அதை கூர் சீட்டு என்பர். அதாவது சொத்துக்களை கூறு போட்ட சீட்டு என்று பொருள். 


அவ்வாறு ஏற்கனவே பாகமாகப் பிரித்துக் கொண்ட சொத்துக்களை ஒரு ஞாபகத்துக்காக அல்லது உறுதிப் படுத்திக் கொள்வதற்காக எழுதிக் கொள்ளும் பாக கூர் சீட்டை, ஸ்டாம்ப் பேப்பர் பத்திரத்தில் எழுதிக் கொள்ள தேவையில்லை. அதை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், அந்த கூர் சீட்டு ஒரு பாகப் பத்திரம் இல்லை. ஆனால் ஏற்கனவே பாகம் பிரித்துக் கொண்டதை உறுதி செய்து எழுதிய சீட்டு மட்டுமே. எனவே அதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


ஆனால், அவ்வாறு எழுதிய கூர்சீட்டிலேயே, அன்றே பாகம் பிரித்துக் கொள்கிறோம் என்று எழுதிக் கொண்டால், அது ஒரு "பாகப் பிரிவினை பத்திரம்" ஆகிவிடும். அவ்வாறு அன்று பாகம் பிரித்துக் கொண்டதாக கூர் எழுதினால், அதை பத்திரப் பேப்பரில் எழுத வேண்டும். அதை பதிவும் (ரிஜிஸ்டரும்) செய்ய வேண்டும் என்று இந்திய ஸ்டாம்பு சட்டமும், இந்திய பதிவுச் சட்டமும் சொல்கிறது.


எனவே பாகப் பத்திரமாக எழுதினால், அதாவது அந்த பத்திரத்திலேயே, சொத்துக்களை பாகமாக பிரித்து எழுதிக் கொண்டால், அதை பத்திர பேப்பரில் எழுதுவதுடன் அதை பதிவும் செய்வது கட்டாயம். 


ஆனால், ஏற்கனவே பாகம் செய்து கொண்ட சொத்துக்களை, ஒரு சீட்டில் எழுதிக் கொண்டால், அதற்கு பத்திரம் தேவையில்லை, பதிவும் தேவையில்லை.


எனவே கூர் சீட்டு எழுதும்போது கவனமாக இந்த விஷயத்தை பார்த்துக் கொண்டு எழுத வேண்டும்.


அதிகப்படியான வழக்குகள் இந்த கூர் சீட்டை தவறுதலாக எழுதியால் ஏற்பட்டவையே. 


அப்படிப்பட்ட கூர் சீட்டை கோர்ட்டில் ஒரு ஆவணமாக தாக்கல் செய்யும் போது, அதை கோர்ட் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது அதற்கு ஸ்டாம்பு கட்டணமும், அபராதமும் கட்டும்படி நேரிடுகிறது. 


Whether the Koor Chit requires registration?


If they divided the property and took possession in the Koor chit itself, that KoorChit must be properly stamped and it needs registration.


On the question of law relating to admissibility of unregistered koor chit vis-a-vis provisions of Section 49 of the Registration Act read with Section 35 of the Indian Stamp Act, it has to be stated that the law is settled that an unstamped document cannot be relied upon for any purpose. 


Factually, the koor chit is only a record of past event. 

**


Friday, September 17, 2021

Abortion law in U.S.A.

Abortion law in U.S.A.

Roe v. Wade 1973

410 U.S. 113 (1973)


Roe v. Wade was a 1971 - 1973 landmark decision by the US Supreme Court. 


The decision divided the nation and is still controversial today. People divided into pro-life and pro-choice groups. 


The court ruled that a state law that banned abortions, was unconstitutional.


The decision said that a woman's right to privacy extended to the fetus/unborn child she was carrying.


In the view of the court, during the first trimester an abortion was no more dangerous.


Human pregnancy is divided into three parts called trimesters. A trimester is about three months long. 


 A miscarriage (spontaneous abortion) is when the baby dies before it is born. 


A stillbirth is when the baby is dead when it is born.


BACKGROUND OF THE CASE


In 1970 a pregnant Texas woman, Norma McCorvey (alias Jane Roe), brought a lawsuit against Henry Wade, Dallas County District Attorney, in a Texas federal court.


Alleging she was a single woman and pregnant, McCorvey wanted to terminate her pregnancy. But the Texas law prohibits abortion in the State of Texas.


Her lawsuit claimed that the Texas law violated her right to privacy, protected by the First, Fourth, Fifth, Ninth, and Fourteenth Amendments.


The US SC held that - the decision of the SC allowed a woman to decide whether to keep or abort the fetus/unborn child during the first trimester.


In a 7-2 decision, the court held that a woman's right to an abortion was protected by her right to privacy under the Fourteenth Amendment.


TRIMESTER RULE


In its decision, the court used the three trimester framework of pregnancy.  During the first trimester an abortion was safer for the mother than childbirth.


During the second trimester laws could regulate abortion only to protect the health of the mother.[


During the third trimester the unborn child was viable (able to live on its own outside the mother's womb).[10] So laws could restrict or prohibit abortions except in cases where it was necessary to preserve the mother's health. 


FETAL VIABILITY


Fetal viability is a medical and a legal term. It describes the ability of an unborn child to survive outside the womb. For the first three months of pregnancy, the unborn child is called embryo, after that it is called fetus.


Usually, children are born after 40 weeks of pregnancy. Very few children are born before the mother reaches 24 weeks of pregnancy. If they are born alive, very few will survive. 


IN 1992 THE LAW HAS BEEN CHANGED


Planned Parenthood v. Casey, 505 U.S. 833 (1992), 


By this judgement it reviewed Roe vs Wade case and  thereby allowing States to implement abortion restrictions that apply during the first trimester of pregnancy.

**


திருமண உறவில் கொடுமை (Cruelty)

திருமண உறவில் கொடுமை (Cruelty)


திருமண உறவில் ஒருவருக்கு ஒருவர் கொடுமை செய்து கொண்டால் அதை ஒரு காரணமாக வைத்து மணமுறிவு (Divorce) பெறலாம் என்று இந்து திருமணச் சட்டம் 1955-ல் சொல்லப்பட்டுள்ளது.


1955 இந்து திருமணச் சட்டம்


1955 திருமணச் சட்டம் கொண்டு வரும்போது, இந்த கொடுமை (cruelty) என்ற காரணத்தைக் கொண்டு மணமுறிவு (Divorce) பெற முடியாது. ஆனால், தம்பதிகள் பிரிந்து வாழும் உரிமை (Judicial Separation) உண்டு. அதை 1955 சட்டத்தில் பிரிவு 10 (1) (b)-ல் வைத்திருந்தது. 1976-ல் அதை எடுத்து விட்டது.


1976 திருமண திருத்தல் சட்டம்


ஆனால் இந்து திருமணச் சட்டம் 1955ஐ 1976-ல் திருத்தம் செய்தது இந்திய பார்லிமெண்ட். அந்த திருத்தல் சட்டத்துக்கு 1976 இந்து திருமணத் திருத்தல் சட்டம் என்று பெயர். அதன்படி, கொடுமை (cruelty) என்பதை ஒரு காரணமாகக் கொண்டு மணமுறிவு பெறலாம் என்று சட்டத்தை மாற்றியது. 


அதன்படி இந்து திருமணச் சட்டம் 1955ன் திருத்தல் சட்டமான 1976 சட்டத்தின்படி, கொடுமை (Cruelty) என்பது மணமுறிவுக்கு (Divorce) ஒரு காரணமாக கேட்க முடியும் என்றும், அதை பிரிவு 13 (1) (i-a)-ல் சேர்த்துக் கொண்டது. 


கொடுமையில் இரண்டு வகை உண்டு. 

1) உடல் ரீதியிலான கொடுமை, 2) மன ரீதியிலான கொடுமை.


உடல் ரீதியிலான கொடுமைகளை நாம் கண்ணால் பார்க்க முடியும். குடிகாரன் மனைவியை அடிப்பது. மனைவிக்கு உடல் ரீதியாக எந்த வகையிலாவது காயம் ஏற்படுத்துவது, மற்றும் மனைவியுடன் உடல் அளவில் உறவில் இல்லாமல் இருப்பது, போன்றவை. 


ஆனால், மன ரீதியிலான கொடுமைகளை விளக்க முடியாது. அது மனதைப் பொறுத்தது. சொல்லப் போனால், உடல் ரீதியிலான கொடுமைகளைக் காட்டிலும், மன ரீதியிலான கொடுமைகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். 


திருவள்ளுவர் கூட, அதை தெரிந்துதான், "தீயினால் சுட்டபுண் உள் ஆறும், ஆறாதே, நாவினால் சுட்ட வடு" என்கிறார். 


ஒருவருக்கு மனதளவில் பாதிப்பை உண்டாக்கினால், அவரை மரணம் வரை கொண்டு செல்லலாம் என்கின்றனர் மனநல வல்லுனர்கள். அதனால் தானோ என்னவோ அதிக தற்கொலைகளும் நடக்கின்றன. 


கொடுமை (Cruelty) என்பதை வரையறுத்துச் சொல்ல முடியாது என்று லார்டு ரீடு என்ற நீதிபதி ஒரு ஆங்கிலேய வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.


Lord Reid in Gollins vs Gollins observed - “No one has ever attempted to give a comprehensive definition of cruelty.”


ஆனாலும், இந்து திருமணச் சட்டம் 1955 (திருத்தல் சட்டம் 1976)-ல் மனு ரீதியிலான கொடுமை () என்பதை ஒரு பொதுவான விளக்கமாகச் சொல்லி உள்ளார்கள். "ஒருவரின் செயல்பாடுகள், மற்றவரின் மனதை காயப்படுத்துவதாக இருந்தாலும், அப்படியான காயங்களுடன் மற்றவருடன் தொடர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை மனரீதியிலான கொடுமை" என்று விளக்கி உள்ளது. 


Mental Cruelty


Mental Cruelty in Section 13 (1) (i-a) in the Hindu Marriage Act 1955 (Amended Act 1976) can broadly be defined as “that conduct which inflicts upon the other party such mental pain and suffering as would make it not possible for that party to live with the other.”


What is cruelty in one case may not amount to cruelty in another case. It is a matter to be determined in each case having regard to the facts and circumstances of that case.


மனத்தளவிலான கொடுமையை கணித்து விட முடியாது. அது தெரிந்தே செய்வதாகவும் இருக்கலாம். தெரியாமல் செய்வதாகவும் இருக்காலம். ஆளுக்கு ஆள் மாறுபடும் இயல்புடையது. மேலும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே வாழ்பவர்களும் இருப்பார்கள். ஒரே வார்த்தையில் பிரிந்து செல்பவர்களும் இருப்பார்கள். 


Irretrievable breakdown

இனி சேர்ந்து வாழும் சூழ்நிலையே இருக்காது என்பதை "சரிசெய்ய முடியாத பிரிவு" என்று சொல்வர். அதுதான் Irretrievable breakdown.


இந்திய சுப்ரீம் கோர்ட் Irretrievable breakdown என்பதான, இனி சேர்ந்து வாழும் வாய்ப்பே இல்லாத தம்பதியரை பிரித்து மணமுறிவை கொடுத்து விடலாம் என்றும், அதற்கான ஒரு சட்டப் பிரிவை திருமணச் சட்டத்தில் அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் பலமுறை பல தீர்ப்புகளில் சொல்லி உள்ளது. ஆனாலும், மத்திய அரசு அதை இதுவரை செய்யவில்லை. 


இனிச் சேர்ந்து வாழும் வாய்ப்பே இல்லாதபோது, பிரித்து விடுவதுதான் சிறந்தது. ஆனால், இதையும் மணமுறிவுக்கு ஒரு காரணமாக சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும். 

**



Doctrine of “Noscitur a Sociis”

Doctrine of “Noscitur a Sociis”

The doctrine of “Noscitur a Sociis” is a rule of construction. It is one of the rules of language used by courts to interpret legislation.

Noscitur a Sociis means that ‘the meaning of an unclear word or phrase should be determined by the words immediately surrounding it. 

In other words, the meaning of a word is to be judged by the accompanying words. 

The translation of Noscitur a Sociis is - where two or more words are associated together, they should take their meaning from one another.

In other words, it can be said that the meaning of an unclear word or phrase must be determined by the words that surround it. 

Therefore this rule or doctrine is more colloquially known as “birds of a feather flock together”.





Thursday, September 16, 2021

Foreign Marriage Act 1969

 Foreign Marriage Act 1969


In a matrimonial case, both the parties are Christian and Protestants by Faith.The wife is an Indian citizen. And the husband is a citizen of the United Kingdom of England.


While that wife was working in Bahrain (Saudi Arabia) she came into contact with her husband and they married in Bahrain under the Foreign Marriage Act 1969 before the Marriage Officer of Bahrain's Political Agent. And they lived sometime in Bahrain.


Thereafter the husband left for London. At that time the wife was pregnant and her husband promised her to take her back to London. Her husband advised to go back to Secunderabad for her delivery at her parents home. Hence she came back to Secunderabad. After she delivered a baby, her husband came back to India and visited her and the child and left India. Thereafter he did not return. She is not even sure whether he is alive or not, as he is a Deep Sea Diver by profession.


The wife filed a divorce petition at Secunderabad on the grounds of desertion. She is entitled for divorce under Sec.27 of the Special Marriage Act 1954 read with the provisions of the Foreign Marriage Act 1969.


Section 4 of the Foreign Marriage Act 1969 provides that a marriage between parties, one of whom at least is a citizen of India, may be solemnized under the Foreign Marriage Act by or before the Marriage Officer in a foreign country. 


In Bahrain, there is no Indian Marriage Officer as required under Sec.3 of the Foreign Marriage Act 1969, as notified by the Govt of India. Therefore their marriage was performed before the Bahrain Political Agent, as Marriage Officer. 


The question before the Court of Divorce is: whether such Political Agent who conducted the foreign marriage is valid or not?


The High Court held that in view of the deeming provision, the registration absolves the parties proving that the marriage was in fact solemnized in accordance with the provisions of the Foreign Marriage Act. Sec.18 of the Foreign Marriage Act undoubtedly applies to all marriages solemnized under the Foreign Marriage Act. 


Hence the High Court has held that it is a valid foreign marriage.

**


மகன்களில் பலவகை

மகன்களில் பலவகை:

இந்து சாஸ்திரத்தில் மகன்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

அதனாலேயே பூர்வீகச் சொத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்களுக்கு மட்டுமே அவர்களின் பிறப்பால் சொத்துரிமை கிடைத்து வந்தது. அந்த வீட்டில் பிறந்த மகளுக்கு பூர்வீகச் சொத்தில் எந்த சொத்துரிமையும் கொடுக்கப்படவில்லை. 

ஒரு மகன், தனது தந்தைக்கும், பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும், அப்படியாக ஏழு தலைமுறைக்கு "சிரதா" (Sraddha) என்ற கர்ம காரியம் செய்ய உரிமை உள்ளவன் என்கிறது இந்து சாஸ்திரம். தனது ஆண் வழி மூதாதையர் சொர்க்கம் செல்ல வேண்டுமானால், அல்லது அவரது ஆன்மா இறைவன் அடி சேர வேண்டுமானால், இந்த பூமியில் உள்ள அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் என ஏழு தலைமுறை ஆண்கள் கர்ம காரியம் செய்ய வேண்டும். அதாவது மூதாதையருக்கு பிண்டம் கொடுக்க வேண்டும். 

ஆனால், அப்படிப்பட்ட மகன், சாஸ்திரப்படி திருமணம் செய்த மனைவி மூலம் பிறந்தவனாக இருக்க வேண்டும். 

12 வகை மகன்கள்:

மகன்களின் வகைகளாக 12 வகை மகன்களைக் கூறுகிறது ஸ்மிருதி என்னும் இந்து தர்ம சாஸ்திரம். அதில் முதல் வகை மகன் எல்லா உரிமையும் பெறுவான். அந்த முதல் வகை மகனை அவுரசா (Aurasa) என்பர். ஒரே ஜாதியில் உள்ள பெண்ணை, சாஸ்திர முறைப்படி திருமணம் செய்து பிறந்த மகனை அவுரசா என்ற வகையை சேர்ந்த மகன் என்பர். அவுரசா என்பதற்கு மார்பில் பிறந்தவன் என்று பொருளாம். இவனே சட்டபூர்வ மகன்.

1) அவுசரசா மகன் (Aurasa son) = சட்டபூர்வ மகன்.

2) தத்தகா மகன் (Dattaka son) = வளர்ப்பு மகன்.

3) கிருத்திம மகன் (Kritrma son) = தத்து எடுக்காமல் பிரியத்துடன் வளர்க்கும் மகன்.

4) சத்ரஷா மகன் (Kshetraja son) = கணவனின் அனுமதியுடன், மனைவி, வேறு ஒருவருக்கு பெற்றுக் கொண்ட மகன். (குந்தி, பாண்டவர்களில் தர்மன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரைப் பெற்றது போல).

5) குதஜா மகன் (Gudhaja son) = மனைவி இரகசியமாக பெற்றுக் கொண்ட மகன் (குந்தி, கர்ணனைப் பெற்றது போல).

6) கனினா மகன் (Kanina son) = ஒரு கன்னிப் பெண்ணுடன் இரகசிய உறவு வைத்துப் பெற்றுக் கொண்ட மகன். (வியாசரை சத்தியவதி பெற்றது போல).

7) புத்திரக புத்திரன் (Putrika putra) = வளர்ப்பு மகளின் மகனை, தன் மகனாக ஏற்றுக் கொள்வது.

8) சகொதஜா மகன் (Sahodhaja son) = திருமணம் செய்யும் போதே மனைவி கர்ப்பமாக இருந்து அதனால் பெற்ற மகனை, தன் மகனாக ஏற்றுக் கொள்வது.

9) கிர்தா மகன் (Krita son) = பணத்துக்காக மகனை வாங்குவது. (தவிட்டுக்கு வாங்குவதாக வேடிக்கையாக பேசிக் கொள்வர்).

10) கிருத்திர்மா மகன் (Kritrima son) = அனாதையானவனை மகனாக ஏற்றுக் கொள்வது.

11) சுயம்மாததா மகன் (Svayamadatta son) = அனாதையாக விடப்பட்டவன், தானே ஒரு தந்தையை தேடிக் கொள்வது.

12) பௌராம்பவ மகன் (Paunarbhava son) = கணவனால் கைவிடப்பட்ட பெண் மூலம், விதவையான பெண் மூலம், பெற்றுக் கொள்ளும் மகன்.

13) அப்விதா மகன் (Apuviddha son ) = கைவிடப்பட்டவனை தனக்கான மகனாக ஏற்பது.

14) நிசாத் மகன் (Nishad son) = பிராமணன், ஒரு சூத்திரப் பெண் மூலம் பெற்றுக் கொண்ட மகன். 

**



Wednesday, September 15, 2021

அரசு நிலங்கள், கிராம நத்தம் மனைகள், புறம்போக்கு நிலங்கள்

அரசு நிலங்கள், கிராம நத்தம் மனைகள், புறம்போக்கு நிலங்கள்:

பயிர் செய்யும் நிலங்கள் தவிர, மற்ற வகையான புறம்போக்கு நிலங்கள், ஏரிகள், குளங்கள், நதிகள், மலைகள், இவைகளை அரசே தன் வசம் வைத்துக் கொண்டது. அதில் தனி நபருக்கு எந்த உரிமையும் இல்லை.

கிராம நத்தம் மனைகள்:

1908-ல் ஒரு சட்டம் இயற்றி, அரசுக்கு சொந்தமான நிலங்களை எவை என்று சொல்லியுள்ளது. அதில் ஒரு கிராமத்தை ஒட்டி உள்ள சில நிலங்களை வீட்டு மனைகளாக, அங்கு குடியிருப்பவர்கள் வீடு கட்டிக் கொள்ளவும், தனது கைத் தொழில்களை (வண்ணார், குயவர், கொல்லர், தச்சர், விவசாயிகள் நெற்கதிர் சேமிப்பு) செய்து வருவதற்காக விட்டு விட்டது. இதை நத்தம் நிலம் என்று வகைப்படுத்தி உள்ளது. நத்தம் என்றால் கிராமத்தை நத்தி (நெருங்கி அல்லது ஒட்டி) உள்ள நிலம் என்ற பொருளில் சொல்லி இருக்கலாம். இதில் மேல் பிரிவினருக்கு கிராம நத்தம் என்றும், கிராமத்தின் புறச்சேரியில் இருப்பவருக்கு சேரி நத்தம் என்றும் வகைப்படுத்தி அந்த நத்தம் நிலங்களை விட்டு வைத்துள்ளது. அதை யார் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். அரசு அந்த நிலத்தை திரும்ப கேட்காது. ஆனால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தால் அரசு உடனே காலி செய்து விடும் உரிமை உண்டு. கிராம நத்தம் என்பதும் ஒருவகை புறம்போக்கு நிலம்தான் என்றாலும், அதை திரும்ப கேட்கும் உரிமை அரசுக்கு இல்லை என்று The Madras Estate Land Act 1908 சட்டத்தில் சொல்லியுள்ளது, மேலும் பல வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டும் தனது பல தீர்ப்புகளில் அதை உறுதிப் படுத்தி உள்ளது.
**



அயன் நஞ்சை புஞ்சை நிலங்கள்:

அயன் நஞ்சை புஞ்சை நிலங்கள்:

பழைய காலத்தில், சில நிலங்கள் அரசிடம் (முன்னர் மன்னரிடமும், பின்னர் பிரிட்டீஸ் அரசிடமும்) இருந்தது. இதை அரசின் நிலம் அல்லது அயன் நிலம் என்பர். அயன் என்றால் பிரம்மா என்று பொருள். அதாவது அதை முதலில் உருவாக்கியவன் என்ற பொருளில் இருக்கலாம். எனவே அயன் நிலம் என்பது அரசு தன் வசம் உரிமையை வைத்துக் கொண்டு, குடியானவருக்கு பயிர் செய்ய கொடுத்த நிலம் என்று புரிந்து கொள்ளலாம். அந்த நிலங்களையும் குடியானவருக்கு ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டதால், அந்த நிலங்களை அடையாளம் காணும் விதமாக அயன் நஞ்சை, அயன் புஞ்சை என்று சொல்வர். 

இனாம் நஞ்சை, இனாம் புஞ்சை:

சில நிலங்களை, மன்னர்கள், அல்லது ஆட்சியாளர்கள், இனாமாக தனி நபருக்கும், கோயில்களுக்கும் கொடுத்து விட்டனர். இதை இனாம் எஸ்டேட் என்பர். இனாம் எஸ்டேட் ஒழிப்பு மூலம், அந்த நிலங்களை குடியானவருக்கே ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டனர். இந்த வகை நிலங்களை இனாம் நஞ்சை, இனாம் புஞ்சை என்று சொல்வர். 

ஜமீன் நஞ்சை, ஜமீன் புஞ்சை:

சில நிலங்களை, மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள், நேரடி வசூல் செய்ய முடியாத நிலையில், ஜமின்தார்களின் பொறுப்பில் கொடுத்து விட்டனர். அவர்கள் மகசூல் வசூல் செய்து அரசுக்கு கொடுப்பார்கள். அதை ஜமீன் எஸ்டேட் என்பர். இந்த ஜமீன் முறையையும் ஒழித்து, குடியானவருக்கே ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டது அரசு. இந்த வகை நிலங்களை இன்றும் ஜமீன் நஞ்சை, ஜமீன் புஞ்சை என்று சொல்வர். 

ரயத்வாரி பட்டா

ரயத்வாரி பட்டா:

குடியானவரின் பயிர் செய்யும் உரிமையை ரயத் (ryot) என்பர். இது ஒரு அரபுச் சொல். அந்த காலத்து மன்னர்கள் இருந்தபோது ஏற்படுத்திய சொல். அப்படி பயிர் செய்பவரை (குடியானவரை) ரயத்வாரி என்பர். எனவே குடியானவருக்கு நிலத்தின் உரிமையை வழங்குவதை ரயத்வாரி பட்டா மூலம் முறைப்படுத்தியது அரசு. 

வழக்குகள்:

இப்படி ரயத்வாரி பட்டா வழங்கும்போது, நிலத்தில் மேல்வாரம் உரிமையுள்ள இனாம்தார் (ஜமின்தார்) போன்றோர், தாங்களே அந்த நிலத்தை நேரடியாக பயிர் செய்து வருவதாகவும், எனவே இரு வார உரிமையும் தங்களிடமே இருப்பதாகவும், எனவே பயிர் செய்பவருக்கு ரயத்வாரி பட்டா வழங்க கூடாது என்றும் ஆட்சேபனை செய்தனர். அப்படி அந்த நிலத்தில் பயிர் செய்பவர், இனம்தாரின் கூலி ஆட்கள் என்றும் சொன்னார்கள். 

எனவே அதற்காக, துணை செட்டில்மெண்ட் அதிகாரிகளை நியமித்து, அவர்கள் யார் குடியானவர் என்று முடிவு செய்து, இந்த ரயத்வாரி பட்டா வழங்கினர். 

1948-ல் வந்த எஸ்டேட் ஒழிப்புச் சட்டம்:

இனாம் நிலச் சொத்துக்கள் (கிராமங்கள்) இல்லாமல், பழைய மன்னர்கள், ஜமின்தார் முறையை கொண்டு வந்து, அவர்களுக்கு பல ஏக்கர் நிலங்களைக் கொடுத்து, அதில் வரும் விவசாய வருமானத்தை, மன்னர்கள் பெற்று வந்தனர். இந்த ஜமின்தார்கள், மன்னர்களுக்கு ஏஜெண்டுகளாக இருந்தனர். இப்படி வெகுகாலம் இந்த முறை தொடர்ந்து வந்தது. இதிலும் குடியானவருக்கு பயிர் செய்யும் உரிமை மட்டும் இருக்கும். விவசாய மகசூல் வருமானத்தில் ஒரு பகுதியை ஜமின்தாருக்கு கொடுக்க வேண்டும். அவர் அதில் பாதியை முழுங்கிவிட்டு மீதியை மன்னருக்கு கொடுப்பார். இந்த முறையானது, பிரிட்டீஸ் ஆட்சியின் போதும் தொடர்ந்து இருந்து வந்தது. 

இதில், ஜமின்தார்களிடம் மாட்டிக் கொண்ட, குடியானவர்கள் பாடு திட்டாட்டமாக இருந்தது. எனவே அரசு 1948-ல் இந்த ஜமீன் முறையை ஒழித்து சட்டம் கொண்டு வந்தது. அதுவே ஜமீன் ஒழிப்பும், ரயத்வாரி பட்டா வழங்கும் சட்டம் 1948 என்று பெயர். 

இதன்படி, ஜமின்தார்களிடம் இருந்து வந்த எஸ்டேட்டுகள் ஒழிக்கப்பட்டன. அந்த நிலங்களை, அதில் பயிர் செய்து வந்த குடியானவரிடமே பட்டா கொடுக்கப் பட்டு, அவருக்கே சொந்தமாக்கியது அரசு. ஜமின்தார்களுக்கு அதனால் ஏற்படும் நஷ்டத்தை பணமாக பல தவனைகளில் அரசே கொடுத்து விட்டது. 

ரயத்வாரி பட்டா:

இப்படிக் கொடுப்பபட்ட பட்டாவே ரயத்வாரி பட்டா என்பது. இதன்படி, குடியானவரே நிலத்தின் உரிமையாளர் ஆகி விட்டார். அதாவது, மண்ணில் இருந்த மேல்வாரம் உரிமையும், பயிர் செய்யும் குடிவார உரிமையும், ஒரே நபரான குடியானவருக்கே கொடுக்கப் பட்டது. இருவார உரிமையும் ஒரே உரிமையானது. 

**

மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் 1963

மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் 1963

The Madras Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Act, 1963

மேஜர் இனாம் & மைனர் இனாம்:

மன்னர்கள் காலத்தில், அந்த மன்னர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு இனாமாக நிலங்கள் கொடுக்கப்பட்டன. இதை ஒரு பட்டயம் மூலம் (செப்புத் தகட்டில் எழுதிக் கொடுப்பது) கொடுத்தார்கள். இதில், ஒரு கிராமம் முழுவதையுமோ அல்லது பல கிராமங்களையோ இனாமாக கொடுத்தார்கள். அப்படி பல கிராமங்களை இனாமாகக் கொடுத்தால் அதை மேஜர் இனாம் (Major Inam) என்று சொல்வர். மேஜர் இனாமை பொதுப் பெயராக இனாம் என்று சொல்வர். ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பகுதி நிலங்களை மட்டும் இனாமாக கொடுத்தால் அதை மைனர் இனாம் (Minor Inam) என்பர்.

மைனர் இனாம் ஒழிப்புச் சட்டம் 1963

இப்படி இனாமாகப் பெற்ற நிலங்களின் உரிமையாளர்களை “இனாம்தார்” என்பர். இந்த இனாம்தார்கள், தங்களின் நிலங்களை குடியானவரிடம் பயிர் செய்ய விட்டு விட்டனர். குடியானவரிடமிருந்து ஒரு பகுதி வருமானத்தை பெற்றுக் கொண்டு வந்தனர். இது காலங்காலமாக நடந்து வந்தது. 

மேல்வாரம் & குடிவாரம் உரிமை:

இப்படிப்பட்ட இனாம் சொத்துக்களில் (நிலங்களில்) இனாம்தாரருக்கு நிலத்தின் உரிமை இருக்கும். இதை மேல்வாரம் உரிமை என்பர். அந்த மண்ணின் மேல் உள்ள உரிமையை மேல்வாரம் என்பர். 

அதேபோல, அந்த இனாம் நிலங்களை பயிரிட்டு வரும் குடியானவருக்கு, பயிர் செய்யும் உரிமை மட்டும் இருக்கும். நிலத்தில் எந்த உரிமையும் இருக்காது. அந்த பயிர் செய்யும் உரிமையை “குடிவாரம்” என்பர். 

மேல் வாரம் & குடி வாரம் என இருவாரம் உரிமைகள்:

 இனாம் சொத்துக்களுக்கும், (அதேபோல ஜமீன் சொத்துக்களுக்கும்) இருவகையான உரிமையான மேல்வாரம், குடிவாரம் என இரு உரிமைகள் இருக்கும். இதில் மேல்வாரம் உரிமை, நிலத்தின் உரிமையாளருக்கு இருக்கும். குடிவாரம் உரிமை, அந்த நிலத்தை பயிர் செய்பவருக்கு இருக்கும். பயிர் செய்பவரை அந்த நிலத்தை விட்டு காலி செய்ய முடியாது. அதன் மகசூல் வருமானத்தை மட்டுமே பெற மண்ணின் உரிமையாளருக்கு உண்டு. 

மேல்வாரம் உரிமையை, நிலத்தின் சொந்தக்காரர், தனியே விற்க முடியும், அடமானம் வைக்க முடியும். பயிர் செய்யும் குடியானவரின் சம்மதம் தேவையில்லை. அதேபோல, பயிர் செய்யும் குடியானவர், தனது குடிவார உரிமையை தனியே விற்க முடியும், அடமானம் வைக்க முடியும். நிலத்தின் சொந்தக்காரரின் அனுமதி தேவையில்லை.

இனாம் ஒழிப்பு:

 மேல்வாரம் & குடிவாரமண் என இரு வார உரிமைகளுடன், இரண்டு உரிமையாளர்கள் ஒரு நிலத்துக்கு இருந்து வந்தனர். இதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அதிக விளைசல் வருமானம் கேட்பது, குடியானவருக்கு நிலத்தில் எந்த உரிமையும் இல்லாமல் இருப்பது போன்றவை பிரச்சனைகளுக்கு காரணங்கள்.


எனவே, அரசு, 1963-ல் இந்த இனாம் ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, நிலத்தை பயிர் செய்யும் குடியானவருக்கே நிலத்தை முழு உரிமையுடன் சொந்தமாக்கி விடுவது என்றும், மேல்வார உரிமையாளருக்கு ஒரு நஷ்ட ஈட்டை கொடுத்து விடுவது என்றும் முடிவானது. 


**



முடிவுற்ற பத்திரங்கள் மற்றும் முடிவுறாத பத்திரங்கள்

முடிவுற்ற பத்திரங்கள் மற்றும் முடிவுறாத பத்திரங்கள்

Executed Contract & Executory Contract

சொத்தின் கிரயப் பத்திரங்களைப் பதிவுக்கு கொடுக்கும்போது, சொத்தை வாங்கியவர், அந்த கிரயப் பத்திரத்தை பதிவாளரிடம் பதிவுக்கு கொடுப்பதே சிறந்த முறை. ஆனாலும் விற்றவரும் அந்த கிரயப் பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம். அது தவறு இல்லை. 

பத்திரங்கள் எழுதி, அதில் கையெழுத்துச் செய்து, சாட்சிகள் கையெழுத்தும் முடிந்தவுடன், அந்த பத்திரம் “ஒரு முடிவுற்ற பத்திரம்” ஆகி விடும். அதாவது அப்படியான பத்திரங்களை Executed Contract என்று பதிவுச் சட்டம் சொல்கிறது. இனி, அதில் இருபார்ட்டிகளும் ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ள வேண்டிய வேலை ஏதும் இருக்காது. அப்படியான பத்திரங்களை முடிவுற்ற பத்திரம் என்பர்.

ஆனால், ஒரு கிரய அக்ரிமெண்ட் பத்திரத்தை அதேபோல் இருபார்ட்டிகளும் கையெழுத்துப் போட்டு, சாட்சிகளின் கையெழுத்தும் பெற்றுக் கொண்டாலும், அது “இன்னும் முடிவுறாத பத்திரம்” என்ற வகையிலேயே இருக்கும். அதில் இருபார்ட்டிகளும், அல்லது அதில் உள்ள ஒரு பார்ட்டியாவது, இன்னும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டிய நிலை இருக்கும். இதை “முடிவுறாத பத்திரம்” அல்லது Executory Contract என்பர். 

சாட்சிகள் எதற்கு அவசியம் அல்லது எதற்கு அவசியம் இல்லை;
 
முடிவுற்ற பத்திரங்களுக்கு (Executed Contract) குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து அவசியம் என்று சட்டம் சொல்கிறது. இதில் கிரயப் பத்திரம், அடமானப் பத்திரம், செட்டில்மெண்ட்/தானப் பத்திரம் போன்றவை வரும்.

ஆனால், முடிவுறாத பத்திரங்களுக்கு (Executory Contract) சாட்சிகள் அவசியம் இல்லை எனச் சட்டம் சொல்கிறது. ஆனாலும் நடைமுறையில் நாம் அந்த வகைப் பத்திரங்களுக்கும் சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், அது சட்டப்படி அவசியம் இல்லை. அப்படி சாட்சிகள் இல்லாமல் அந்த பத்திரங்களை எழுதி இருந்தாலும், அவைகளும் சட்டப்படி செல்லும்.
அதற்கு உதாரணமாக - கிரய அக்ரிமெண்டுகள், வாடகை அக்ரிமெண்டுகள், ஹையர் பர்சேஸ் அக்ரிமெண்டுகள் (வண்டி வாகனங்களை மாதத் தவணைகளுக்கு வாங்கும் அக்ரிமெண்டுகள்), இவைகளுக்கு சாட்சிகள் தேவையில்லை அல்லது அவசியமில்லை.

அதாவது - 
(1)கிரயப் பத்திரத்துக்கு சா்ட்சிகள் அவசியம். ஏனென்றால் அது முடிவுற்ற பத்திரம். (Executed Contract). அதற்கு பின்னர் அதில் செய்ய வேண்டிய வேலை ஏதும் இல்லை. பணம் கொடுத்து முடிந்தது. அல்லது பின்னர் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சொத்தின் உரிமையை, சுவாதீனத்தை ஒப்படைக்கப்பட்டு விட்டது. அல்லது பின்னர் ஒப்படைப்பதாக சொல்லியதை ஏற்றுக் கொண்டு விட்டது. இனி இதில் வேறு வேலை இல்லை. 

(2) சொத்தை வாங்குவதற்கு முன்னர் ஏற்படுத்திக் கொள்ளும் கிரய அக்ரிமெண்டுகளுக்கு சாட்சிகள் அவசியம் இல்லை. ஏனென்றால், அது ஒரு முடிவுறதாத பத்திரம் அல்லது இன்னும் அதில் செய்ய வேண்டிய வேலை இரண்டு பார்ட்டிகளுக்கும் இருக்கிறது என்று பொருள். இன்னும் ஒரு பார்ட்டி பணம் கொடுக்க வேண்டும். மற்றொரு பார்ட்டி சொத்தின் உரிமையை, சுவாதீனத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும். அடிப்படை வேலையே பாக்கி இருக்கிறது. 

ஏன் சாட்சிகள் அவசியம்?

ஏன் முடிவுற்ற பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் என்றும், முடிவுறாத பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் இல்லை என்றும் சொல்கிறார்கள். முடிவுற்ற பத்திரங்களை நிரூபிக்க சாட்சிகள் தேவை. 

முடிவுறாத பத்திரங்களை நிரூபிக்க அவசியம் ஏற்படாது. அதில் செய்ய வேண்டிய வேலைகளை மட்டுமே ஒருவர் மற்றவருக்கு செய்து கொடுக்க வேண்டும். இரண்டு பேருக்கு (பார்ட்டிகளுக்குமே) ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ளும் வேலையை நிறுத்தி வைத்துள்ளார்கள். 

புரோ நோட்டுக்கு சாட்சிகள் அவசியமா?

புரோநோட் எழுதிக் கொடுக்கும் போது, அதற்கு சாட்சி அவசியம் இல்லை என்றே சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் நாம் அதற்கும் சாட்சிகளின் கையெழுத்தை வாங்கிக் கொள்கிறோம். ஒரு புரோ நோட் என்பது “ஒரு முடிவுறாத பத்திரம்”. எனவே அதற்கு சாட்சி அவசியம் இல்லை. 

உயிலுக்கு சாட்சிகள் அவசியமா?

உயில் பத்திரங்களுக்கு கண்டிப்பாக குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகள் அவசியம் என்று இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925-ன் பிரிவு 63-ல் சொல்லியுள்ளது. அப்படி இரண்டு சாட்சிகள் இல்லாத உயில் செல்லாது. அதிலும், அந்த இரண்டு சாட்சிகளில் யாராவது ஒரு சாட்சியாவது, உயிலை எழுதி வைத்தவர் போட்ட கையெழுத்தை நேரில் பார்த்து இருக்க வேண்டும். மற்றொரு சாட்சி அப்படி நேரில் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், இரண்டு சாட்சிகளுமே, உயில் எழுதியவர் அந்த உயிலில் கையெழுத்துச் செய்யும் போது, அதை நேரில் பார்த்து இருந்தால் நல்லது. ஏனென்றால், உயிலை எழுதி வைத்தவர் இறந்த பின்னரே அந்த உயிலுக்கு “உயிர்” வரும். அப்போது, அந்த உயிலை அவர்தான் எழுதி வைத்தார் என்றும், அதை தான் நேரில் பார்த்ததாகவும், அப்போது, அவர் நல்ல மனநிலையில், யார் தூண்டுதலும் இல்லாமல், தன்னிச்சையாகவே அதை எழுதினார் என்றும் சொல்ல வேண்டும். எனவே உயிலுக்கு அல்லது அந்த உயில் உண்மையான உயில் என்பதற்கு அந்த இரண்டு சாட்சிகள் தான் உயிர்நாடி. 

அந்த உயிலின் இரண்டு சாட்சிகளில், யாராவது ஒரு சாட்சி, தான் அந்த உயில் எழுதும்போது, அல்லது உயிலை எழுதியவர் கையெழுத்துச் செய்யும் போது, நேரில் இருந்ததாகச் சொன்னால் போதும்.

ஒருவேளை, அந்த இரண்டு சாட்சிகளுமே, உயிலை எழுதி வைத்தவர் இறப்பதற்கு முன்னரே இறந்து விட்டால், அல்லது உயிலை எழுதி வைத்தவர் இறந்த பின்னர், இரண்டு சாட்சிகளும் இறந்து விட்டால், அந்த உயிலை எப்படி நிரூபிப்பது என்ற குழப்பம் வந்துவிடும். அல்லது இந்த சாட்சிகள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் போனாலும் சிக்கல்தான். 

அப்படி சாட்சிகள் கிடைக்காமல் போனால், அந்த சாட்சிகளின் கையெழுத்தைத் தெரிந்தவர் யாராவது இருந்தால், அவரைக் கொண்டு, இது அந்த சாட்சியின் கையெழுத்துத்தான் என்றும், உயிலை எழுதியவரின் கையெழுத்தையும் அதேபோல, வேறு நபரைக் கொண்டு, அது அந்த உயில் எழுதியவரின் கையெழுத்துத்தான் என்றும் நிரூபித்தால் போதும் என்று இந்திய சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 69 சொல்கிறது.

**