Friday, May 29, 2020

வாழிய முருகா!

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த

பறியாக் குவளை மலரொடு காந்தள்

குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,

பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்

அருவி இன் இயத்து ஆடும் நாடன்

மார்பு தர வந்த படர் மலி அரு நோய்

நின் அணங்கு அன்மை அறிந்தும்,

அண்ணாந்து, கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,

வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!

கடவுள் ஆயினும் ஆக, மடவை மன்ற, வாழிய முருகே!

(நற்றிணை)

 

பெண் கடவுள் வசிக்கும் குன்றில் இருந்து விழும் கற்சுனை நீர், இலைகளால் சூழப்பட்ட (அடை இறந்து), மலர்ந்த பறிக்கப்படாத குவளை மலர்களையும், காந்தள் மலர்களையும், இரத்தச் சிவப்பு மலர்களையும் ஒன்றாகச் சேர்த்து மாலை போலக் கட்டி அணிந்து, நீண்ட மலைமுகடுகளை கொண்ட (பெரு வரை) அடுக்கிலிருந்து ஒளியூட்டும் (பொற்ப) சூர் மகளிரான தேவதைகளைப் போல விழுகிறது. அப்படிப்பட்ட மலையை கொண்டது அந்தப் பகுதியான அவன் வாழும் நிலம். அவன் மார்பைக் கட்டி அனைத்து இருந்தவள் இப்போது அவன் இல்லாமல் நோயால் வாடுகிறாள். முருகா! இதற்கு காரணம் நீ இல்லை என்பது உனக்கே தெரியும். இருந்தாலும், கடம்ப மலர்களை சூடியுள்ள இந்த வைத்தியன், உன்னால்தான் இது ஏற்பட்டது என்று வானத்தைப் பார்த்து உன்னை அழைக்கிறான். நீயும் இறங்கி வந்து அவளுக்கு மேலும் துன்பம் தருகிறாய். நீ, கடவுளே ஆனாலும் ஆகுக, முட்டாள் கடவுளே முருகா நீ வாழ்க!

(அவள் காதல் பைத்தியத்தில் இருக்கிறாள். பேய் ஓட்டும் வைத்தியனோ அது உன்னால் முடியும் என்று முருகனான உன்னை அழைக்கிறான். முட்டாள் கடவுளே, அவளோ அவள் காதலன் மேல் பைத்தியமாக இருக்கிறாள் என்பது உனக்குத் தெரியாதா? தெரிந்தும் அதை நம்பி நீயும் வந்திருக்கிறாயே முருகா!).


Friday, February 7, 2020

பிரஜாபதி சொல்கிறார்: கணவனின் பாதி உடம்பும் ஆன்மாவும் அவனின் மனைவிதான் என்கிறார்.

பிரஜாபதி சொல்கிறார்: கணவனின் பாதி உடம்பும் ஆன்மாவும் அவனின் மனைவிதான் என்கிறார்.  கணவன் இறந்தபின், அவனின் மறுபாதியான மனைவி இறக்காமல் இருக்கும்போது, எப்படி அவனின் சொத்து மற்றவர்களுக்குப் போகும்? என்கிறார்.

பதிவிரதைக்கு மட்டுமே அவள் கணவனின் சொத்தில் பங்கு:

மைனர் இராமையாக் கோனார் v. முத்தையா முதலியார்,

AIR 1951 Mad 954 : (1951) II MLJ 314

Author: Chief Justice Rajamannar, Justice Viswanatha Sastri, Justice Panchapakesa Iyer.

சென்னை உயர்நீதிமன்றம் 1951-ல் வழங்கிய தீர்ப்பு

சபாபதி படையாச்சியும் முத்துவேலு படையாச்சியும் பாகம் பிரியாத இந்து சகோதரர்கள். இதில், முத்துவேலு படையாச்சி 1943-ல் இறந்து விடுகிறார். முத்துவேலு படையாச்சிக்கு அலமேலு என்று ஒரு மனைவி உண்டு. மகன் இல்லை. இரு சகோதரர்களுக்கும் கூட்டுக் குடும்பச் சொத்துக்கள் இருக்கின்றன. பழைய இந்து சாஸ்திர சட்டப்படி கூட்டுக்குடும்ப சொத்தில், ஒரு சகோதரர் இறந்து விட்டால், அவரின் பங்கானது அவரின் மற்றொரு சகோதரருக்குப் போய் சேரும்.

ஆனால், இங்கு, அந்த அலமேலு தன் இறந்த கணவரின் பாதி பாகச் சொத்தை, இராமையாக் கோனாருக்கு விற்று விடுகிறார். பழைய இந்து சட்டப்படி, இந்து கூட்டுக் குடும்பச் சொத்துக்களில் விதவை மனைவிகளுக்கு பங்கு கிடையாது. பங்காளிகள் (Coparceners) மட்டுமே கூட்டுக் குடும்பச் சொத்தை எடுத்துக் கொள்வார்கள். விதவை மனைவி  அவர் கணவரின் பங்காளிகளின் பராமரிப்பில் இருந்து வர வேண்டும். இப்படியான, பழைய இந்து சட்டத்துக்குப் பின்னர், இந்து விதவைகளுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என கருதி, ஒரு புதிய சட்டத்தை பிரிட்டீஸ் அரசு இந்தியாவில் கொண்டு வருகிறது. அந்தச் சட்டத்தின் பெயர் The Hindu Women’s Rights to Property Act, 1937. இந்த 1937 சட்டம் வந்தபின்னர், விதவை மனைவிகளுக்கு தன் கணவரின் சொத்தில் பங்கு கிடைக்கிறது. அது எப்படி என்றால்: இறந்த இந்து ஆணுக்கு கூட்டுக் குடும்பச் சொத்து இருந்து, அவர் மனைவியையும், மகனையும் விட்டுவிட்டு இறந்து விட்டால், இறந்தவருக்கு ஒரு பங்கும், அவரின் மகனுக்கு ஒரு பங்கும் கிடைக்கும். இறந்தவரின் பங்கை, அவரின் விதவை மனைவி அவளின் ஆயுட்காலம் வரை அனுபவித்து வரலாம். அடமானம் வைத்து கடன் பெறலாம். விற்பனையும் செய்யலாம். ஆனால் அந்த விற்பனையானது அவளின் ஆயுட்காலம் வரை செல்லும். அவள் காலத்துக்குப் பின்னர் அந்தப் பாகச் சொத்து, அவளின் மகனுக்குப் போய்ச் சேரும். 

ஒருவேளை, அந்த இறந்து இந்து ஆணுக்கு, மகனே இல்லாமல் இருந்தால், அவரின் விதவை மனைவி அவரின் பங்கை முழு உரிமையுடன் அடைந்து கொள்வாள். எனவே இந்த வழக்கில், இறந்த முத்துவேலு படையாச்சிக்கு மகன் இல்லை. விதவை மனைவி மட்டுமே இருக்கிறாள். எனவே முத்துவேலு படையாச்சிக்குச் சேர வேண்டிய சொத்து, அவரின் விதவை மனைவிக்கு முழு உரிமையுடன் வருகிறது. ஆகவே அவள் அந்தச் சொத்தை இராமையாக் கோனாருக்கு விற்று விடுகிறாள். தான் விற்றது 1937  பெண்களின் சொத்துரிமைச் சட்டப்படி செல்லும் என்கிறாள். 

ஆனால், இறந்த முத்துவேலு படையாச்சியின் சகோதரர் சபாபதி படையாச்சியோ, இந்த சொத்து முழுவதும் தனக்கே வந்து சேரும் என்று மொத்த சொத்தையும் முத்தையா முதலியாருக்கு விற்று விடுகிறார். அவர் கூற்றுப்படி, கணவர் இறப்பதற்கு முன்னரே அலமேலு அம்மாள், கும்பகோணத்தில் வேறு ஒரு நபருடன் வாழ்க்கை நடத்தி்க் கொண்டு இருக்கிறாள் என்கிறார். அது இங்கு மறுக்கப்படவில்லை.

பழைய இந்து சாஸ்திர சட்டப்படி, விதவை மனைவி நடத்தை கெட்டவளாக (Unchaste wife) இருந்தால் இறந்த கணவரின் பங்கைப் பெற முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது என்றும், மேலும், 1937-ல் வந்த பெண்கள் சொத்துரிமை சட்டத்திலும், நடத்தை கெட்ட விதவை மனைவி, கணவரின் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்றும் மறைமுகமாகவே சொல்லப் பட்டுள்ளது என்றும் சொத்தை வாங்கிய முத்தையா முதலியார் வாதம் செய்கிறார். 

பழைய இந்து சாஸ்திர சட்டத்தில் நடத்தைகெட்ட விதவை, கணவரின் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், 1937-ல் வந்த பெண்கள் சொத்துரிமை சட்டத்தில் அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும். “Notwithstanding any rule of Hindu Law or custom to the contrary, the provisions of Sec.3 shall apply where a Hindu dies intestate…..” என்று குறிப்பிட்டுள்ளதாகவும், எனவே பழைய இந்து சாஸ்திர சட்டம் எப்படி இருந்தபோதிலும், நடத்தை கெட்ட விதவையும் அவள் கணவனின் சொத்தில் பங்கு பெறலாம் என்று உள்ளதாக இராமையாக் கோனார் வாதம் செய்கிறார்.

கோர்ட்டின் தீர்ப்பு:

Justice Rajamannar:

பழைய இந்து சாஸ்திர சட்டப்படி, நடத்தை கெட்ட விதவை, கணவரின் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்பது சரியே. 1937-ல் வந்த “பெண்கள் சொத்துரிமை சட்டத்திலும்” அப்படியே சொல்லப்பட்டுள்ளதா என்பதே கேள்வி. 1937-ல் இந்தச் சட்டம் வரும் போது, பெண்களுக்கு குறிப்பாக விதவைகளுக்கு கணவரின் சொத்தில் பங்குரிமை வேண்டும் என்று நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். 

1937-சட்டத்தில், இந்து கூட்டுரிமை சொத்தில், இறந்த ஆணின் பங்கு, அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் இவர்களுடன், விதவை மனைவியும் சேர்ந்து பங்கு பெறுவாள் என்றும், இறந்த கணவருக்கு கிடைக்கும் ஒரு பங்கை, அவரின் விதவை மனைவி அடைந்து கொள்ளலாம் என்றும், ஆனால் அவள் அதை அவளின் ஆயுட்காலம் வரை அனுபவிக்க மட்டுமே உரிமை உண்டு என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது. ஒருவேளை இறந்த இந்து ஆணுக்கு மகன்கள் இல்லாதபோது, விதவை மனைவி மட்டுமே மொத்த சொத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அதில் நடத்தை கெட்ட மனைவி சொத்தை அடைய முடியாது என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 1937 சட்டத்தில் “Notwithstanding any rule of Hindu law or custom to the contrary….” என்று சொல்லப்பட்டுள்ளதை வைத்துப் பார்த்தால், பழைய இந்து சாஸ்திர சட்டத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றே கருத வேண்டும்.

ஏனென்றால், பழைய இந்து சாஸ்திர சட்டத்தில், ஊமை, மனநிலை சரியால்லாதவன், குஷ்டரோகி இவர்கள் வாரிசாக இருந்தால், அவர்கள் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு பெற முடியாது என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், 1928-ல் ஒரு சட்டம் கொண்டு வந்து இந்த குறையை நீக்கி விட்டார்கள். அந்தச் சட்டத்துக்குப் பெயர் The Hindu Inheritance (Removal of Disabilities) Act XII of 1928. 

1928 சட்டத்திலும், நடத்தை கெட்ட மனைவிக்கு பங்கு இல்லை என்பதைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. எனவே 1928 சட்டத்திலும், 1937 சட்டத்திலும் நடத்தை கெட்ட விதவை மனைவி கணவனின் சொத்தில் பங்கு பெறலாம் என்று எந்தவிதத்திலும் சொல்லப்படவில்லை.

Justice Viswanatha Sastri: 

It is the general rule of Hindu law that a son excludes the widow in respect of  separate property; and the surviving coparceners exclude the widow in respect of joint family property. The point for determination is whether a Hindu married woman living in adultery at the time of her husband’s death is disqualified by reason of her unchastity from succeeding to his interest in joint family property under Sec.8 of the Hindu Women’s Rights to Property Act XVIII of 1937.

பழைய இந்து சாஸ்திரங்கள், “இந்து விதவை, அவள் கணவர் இறக்கும்போதும் பதிவிரதையாக இருக்க வேண்டும்; அவன் இறந்த பின்னரும் அவ்வாறே இருக்க வேண்டும்” என்கிறது.

மனு சாஸ்திரம்: “The wife alone, being sonless and keeping the bed of her lord unsullied and leading a life of religious observance, may take his entire estate.” என்கிறது. மகன் இல்லாமல் இறந்த இந்து ஆணின் சொத்தை அவனின் விதவை மனைவி முழுவதுமாக அடையலாம். ஆனால் அவளின் கணவன் இறப்பதற்கு முன்னரும், பின்னரும் அவள் பதிவிரதையாகவும் இருக்க வேண்டும்.

காட்டாயனா இந்து சாஸ்திரம்: Let the sonless widow, preserving unsullied the bed of her lord and bidding with her venerable protector, enjoy with moderation he (husband’s) property until her death.

மற்ற இந்து சாஸ்திரங்களில்: Other texts state that “half the body” of her deaceased husband the widow takes his property in default of male issue. The above texts show that not only that the sonless widow’s right in her husband’s property is a mere right of enjoyment but that the exercise of that right is dependent on her chastity. The chastity is imposed as a permanent condition of the widow’s enjoymnet of her husband’s estate; and that a violation of that condition would involve a forfeiture of the right.

ஆனால், ஐரோப்பிய பண்டிதர் கூல்புரூக் மற்றும் ஐரோப்பிய நீதிபதிகள் இந்த இந்து சாஸ்திர சட்டத்தை வேறு மாதிரி விளக்கி உள்ளார்கள். “கணவர் இறக்கும் தருவாயில் அவனின் மனைவி பதிவிரதையாக இருந்தால் போதும். அவனின் சொத்துக்களை அவள் அடையலாம். அதன் பின்னர், அவள் தொடர்ந்து பதிவிரதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இல்லாத போதும், அவள், கணவரின் சொத்தை தொடர்ந்து அனுபவிக்கலாம்” என்று சட்ட வியாக்கியானம் செய்துள்ளனர். 

ஆனால், இந்திய நீதிபதிகள் வேறு மாதிரி சட்ட வியாக்கியானம் செய்துள்ளனர். கூட்டுக் குடும்ப சொத்தில், கணவன் இறந்து விட்டால், அவனின் விதவை, அவளின் வாழ்நாள் வரை ஜீவனாம்ச உரிமை பெற தகுதி உடையவள். ஆனால் அவள் பதிவிரதை தன்மையை பின்னர் இழந்து விட்டால், அவளுக்கு ஜீவனாம்ச உரிமை நிறுத்தப்படும். அப்படி இருக்கும்போது, மகன் இல்லாத விதவை, தன் கணவரின் சொத்தை முழுவதுமாக அடைந்து அனுபவிக்க அவள் பதிவிரதையாக இருக்க வேண்டும். கணவன் இறக்கும்போதும் பதிவிரதையாகவும், இறந்த பின்னரும் பதிவிரதையாகவும் இருக்க வேண்டும். சொத்துக் கிடைத்த பின்னர் அவள் அதை மீறினால், அவளின் உரிமை பறிக்கப்படும் என்கிறார்கள்.

கந்தசாமி பிள்ளை v. முருகம்மாள் என்ற வழக்கில் (இது 1895-ல் சென்னை உயர்நிதிமன்றம் வழங்கிய தீர்ப்பு (1896) ILR 19 Mad 6.  Justice சுப்பிரமணிய ஐயர் வழங்கிய தீர்ப்பு) விதவை மனைவி பதிவிரதையாக இல்லாமல் இருந்தால், அதற்காக அவளை தெருவில் விட முடியுமா? அவள் வாழ்நாள் ஜீவனத்துக்கு என்ன செய்வாள்? இந்த விஷயத்தைப் பொறுத்து முடிவு எடுப்பது கஷ்டம்தான். As a rule of conduct, for husband, that even the wife who has been guilty of unchastity should not be left in a state of perfect destitution. But it has still be determined in what cases and to what extent the Court will enforce them. 

எனவே கணவன் இறக்கும்போது, விதவை பதிவிரதையாக இருந்தால் போதும். அவள், கணவன் சொத்தில் பங்கு பெறலாம். அதற்குப் பின்னர் அவள் பதிவிரதையாக இருக்க கட்டாயப் படுத்து முடியாது. The condition of chastity however attaches to the estate only at its commencement. Though the Act (1937 Act) conferred new rights of succession on Hindu widows in the two classess of cases, it did not purport to abrogate the pre-existing rule of Hindu law excluding an unchaste widow from succession to the property of her husband.

1946-ல் ஒரு சட்டம் வந்தது. The Hindu Married Women’s Rights to Separate Residence and Maintenance Act 1946.அதில் பதிவிரதையாக இல்லாத மனைவி, கணவனை விட்டு தனித்து வாழ உரிமை கோர முடியாது என்றும், அது ஒரு சிறு குற்றம் என்று எடுத்துக் கொள்ள முடியாது (That an adulterous conduct or unchastity in a marrried woman was not a minor or negligible misdemeanour) என்று கூறியுள்ளது.

எனவே, விதவை அலமேலு, அவள் கணவர் இறப்பதற்கு முன்பே வேறு ஒருவருடன் வாழ்கிறாள். பதிவிராத தன்மையை இழந்தவள் கணவன் சொத்தில் பங்கு பெற முடியாது. எனவே அலமேலு எழுதிக் கொடுத்த கிரயம் செல்லாது.

Justice Panchapakesa Iyer:

Chastity is considered by all schools of Hindu law, and by all Hindus as Truth in Action, and this is a land where it is proclaimed that God is Truth and Truth is God. For the Hidus, chastity in wife is the first thing required, all other qualities paling into insignificance beside it.

வேதம் என்ன சொல்கிறது என்றால்: அர்தா வா ஏச ஆத்மனே யஞ்யேதா. She….the wife…is born as half of the self. Sati Savitri leaped across death with chastity as her sole armour and shield, and got back the life of her husband, Satyawan, from Yama who had to yield her husband’s body, the submerged half of the wand of life of the couple, when it was pulled by her, his half standing out of the waters of death. 

பிரஜாபதி சொல்கிறார்: கணவனின் பாதி உடம்பும் ஆன்மாவும் அவனின் மனைவிதான் என்கிறார்.  கணவன் இறந்தபின், அவனின் மறுபாதியான மனைவி இறக்காமல் இருக்கும்போது, எப்படி அவனின் சொத்து மற்றவர்களுக்குப் போகும்? In Vedas and Smritis and popular usage, the wife is declared to be half of the body of her husband and to be sharing equally the furits of her husband’s good and bad acts. Of him whose wife is not dead, half the body survives. When half his body survives, how can any one else inherit his property? 

யஞ்ஞவாக்கியர் சொல்கிறார்: ஒரு இந்து, அவனின் மகன் இல்லாமல் இறந்து விட்டால், அவனின் மனைவி, மகள், பெற்றோர், சகோதரன்கள் அவனின் சொத்து அடைவார்கள்.

விஷ்ணு சொல்கிறார்: ஒரு இந்து, அவனின் மகன் இல்லாமல் இறந்து விட்டால், அவனின் மனைவி அந்தச் சொத்தை அடைவாள்.

பிரபஸ்பதியும் இதேயே சொல்கிறார். மேலும், Performing religious ceremonies and observing fasts, chaste, virtuous, and always making gifts for the benefit of her husband’s soul, even a childless widow goes to heaven. ஒரு இந்து ஆணுக்கு மகன் இல்லை என்றால், அவனுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. ஆனால், அ்வன் மனைவி பதிவிரதையாக இருந்து அவனுக்காக தான தர்மம் செய்து வந்தால், அவளும் சொர்கத்தை அடைவாள்.

திருவள்ளுவர் சொல்கிறார். பதிவிரதை சொன்னால் உடனே மழை பெய்யும். (பெய் எனப் பெய்யும் மழை). “Is there anything greater than a wife with the armour and shield of chastity? She workships no other God than her husband. Verily, at her bidding the rain fall. Her chastity is her armour and her shield. A home with a chaste wife lacks nothing. If a wife lacks chastity, the home is doomed.

And this was only natural, seeing that the patriarchal Hindu law, of Sapindas and Samanodhakas, depended on the chastity of the cornerstone of its edifice.  

எனவே, 1937 சட்டமானது விதவைகளுக்கு கணவன் சொத்தில் பங்குரிமை அளிப்பதற்காக கொண்டு வரப் பட்டது. அதில் பழைய இந்து சாஸ்திர சட்டத்தில் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை. (பிறவி புத்தி சுவாதீனம் இல்லாதவர், பிறவிப் பைத்தியம், கணவனைக் கொலை செய்தவள், பதிவிரதை தன்மையை இழந்தவள் இவர்களுக்குச் சொத்தில் பங்கு இல்லை).

ஜிமூக்தவாகனர் கொள்கை: A hundred texts cannot annul a settled fact. In other words, it is only a rule of prudence recognising ‘a fait accompli’ and cannot be applied before the fact occurs.

எனவே, கணவன் சொத்தில் விதவை மனைவிக்கு பங்கு கொடுக்கும்போது, அவள் பதிவிரதை என்று பார்ப்பதில் தவறில்லை. It is only a ‘quid pro quo’. சரிக்குச் சரி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில், விதவை அலமேலு, கணவனை விட்டுவிட்டு, ஒரு கள்ளக் காதலனுடன் ஓடி விட்டாள். பின்னர் கணவன் சென்று அழைத்து வருகிறான். சில நாட்கள் கழித்து மறுபடியும் அவனிடமே ஓடிப் போகிறாள். இப்போதும் அவனுடன் தான் வாழ்ந்து வருகிறாள். அவள் கணவன் இறக்கும்போதும், அவள் அந்த காதலடனுடன் தான் வாழ்கிறாள்.

Neither equity not good conscience can be invoked on behalf of such a wife for inheriting the property of her husband she had wronged so grieviously. நியாயப்படியும், மனச்சாட்சிப் படியும் அவள் கணவன் சொத்தில் பங்கு பெற முடியாது.

**


Wednesday, January 22, 2020

Court Fee for Cancellation of a Document

Court fee for Cancellation of a Document

ஒரு எழுதப் படிக்கத் தெரியாத கிழவியிடமிருந்து கடன் கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றிக் கிரயம் வாங்கி விட்டார் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குப் போடுகிறார். ஆனால் எதிர்பார்ட்டியோ, அதன் சொத்து மதிப்புக்கு கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். அவர் கிரயம் வாங்கிய பத்திரத்தில் ரூ.15,000 என்று சொல்லி உள்ளார். ஆனால் தற்போதைய மதிப்பான ரு.ஒரு லட்சத்துக்கு கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். கீழ்கோர்ட் அவரின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. கிரயம் வாங்கியதே ரூ.15,000 என்று இருக்கும்போது, அதற்குத்தான் கோர்ட் கட்டணம் செலுத்த முடியும் என்று கீழ்கோர்ட் சொல்லிவிட்டது.

அந்த கீழ்கோர்ட் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ரிவிஷன் மனுச் செய்கிறார்.  சிபிசி ஆர்டர் 14-ல் வழக்கில் உள்ள பிரச்சனை என்ன என்றும், எதைத் தீ்ர்வு காண வேண்டும் என்று கேள்விகளாக கோர்ட் முடிவு செய்யும். இதை வழக்கு விசாரனை ஆரம்பிக்கும் முன்னர் முடிவு செய்து கொள்ளும். அதற்கு ஏற்ப சாட்சிகளையும், சாட்சியங்களையும் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கு விசாரனையை நடத்துவார்கள்.

அப்படி கேள்விகளை முடிவு செய்யும்போது, சாட்சியங்களைக் கொண்டு விசாரிக்க வேண்டியவைகளை விசாரனைக்கு ஏற்கும். சட்டம் சார்ந்து முடிவு செய்யும் விஷயங்களை, வழக்கு விசாரனைக்கு முன்னரே முடிவு செய்யும். உதாரணமாக இந்த கோர்ட்டுக்கு எல்லை அதிகாரம் இல்லை என்று கூறினால், அதை வழக்கு விசாரனைக்கு முன்னரே கோர்ட் முடிவு செய்ய வேண்டும். சட்டமும், சாட்சியமும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டி இருந்தால், அதை விசாரனையில் தான் முடிவு செய்ய முடியும்.

எனவே சட்டசிக்கல் இருந்தால் வழக்கின் விசாரனைக்கு முன்னர் முடிவு செய்ய வேண்டும். சாட்சிய விசாரனையும், சட்ட விசாரனையும் கலந்து இருந்தால், சாட்சிகளை விசாரித்த பின்னர் கோர்ட் முடிவு செய்யலாம்.

எனவே கோர்ட் கட்டணம் குறைவாக கட்டி உள்ளார்களா என்பது சட்டம் சார்ந்த பிரச்சனை. அதை வழக்கு போட்டவரின் வாதுரையின் பேரிலேயே முடிவு செய்ய முடியும், அதற்கு சாட்சி விசாரனை, சாட்சியம் விசாரனை அவசியம் இல்லை. இதை வழக்கு விசாரனைக்கு முன்னரும் விசாரிக்கலாம், அல்லது விசாரனை முடித்தும் முடிவு எடுக்கலாம்.

கோர்ட் கட்டணச் சட்டம் என்பது உரிமை சார்ந்த சட்டம் (Substantial law). ஆனால் சிவில் நடைமுறைச் சட்டம் என்பது நடைமுறை சார்ந்த சட்டம் (Procedural law). எனவே கோர்ட் கட்டணப் பிரச்சனையை வழக்கு விசாரனைக்கு முன்னரே விசாரித்து முடிவு செய்து விட வேண்டும்.

கிரயப் பத்திரத்தை ரத்து செய்ய போடும் வழக்கில் கோர்ட் கட்டணம், வழக்குப் போடும் தேதியில் அந்த சொத்தின் மதிப்புக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா? அல்லது பத்திரத்தில் உள்ள மதிப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது கேள்வி.

In Padma Bivi Ammal v Mohammad Mohideen Rowthar, 1950 (2) MLJ 268 என்ற வழக்கில், இப்படிப்பட்ட சூழ்நிலையில், வழக்குப் போடும் நாளில் அந்த சொத்தின் மதிப்புக்கு கோர்ட் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தீர்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை மேற்கோள் காட்டி, 2002-ல் சென்னை ஐகோர்ட் VR Gopalakrishnan v Andiammal (25 Jan 2002) ஒரு தீர்ப்பும் வழங்கி உள்ளது.

Police Aid in Civil Cases:

Police Aid in Civil Cases:

"If the police authorities are under a legal duty to enforce the law and the Public or the citizens are entitled to seek directions under Article 226 of the Constitution for discharge of such duties by the Police Authorities we feel that the civil courts can also give appropriate directions under Section 151 Civil P. C. to render aid to the aggrieved parties for the due and proper implementation of the orders of Court. It cannot be said that in such a case the exercise of the inherent power under Section 151, Civil P. C. is devoid of jurisdiction. There is no express provision in the Code prohibiting the exercise of such a power and the Court can give appropriate directions at the instance of the aggrieved parties to the police authorities to render its aid for enforcement of the Court's order in a lawful manner."

(Andhra Pradesh High Court AIR 1971 AP 53)

Police owe a legal duty to the public:

Police owe a legal duty to the public:

That the police authorities owe a legal duty to the public to enforce the law is clear from a decision of the Court of Appeal, reported in R. v. Metropolitan Police Commr. (1968) 1 All ER 763, where Lord Denning, M. R. observed at page 769 as follows:

"hold it to be the duty of the Commissioner of police, as it is of every chief constable to enforce e the law of the land...............but in all these things he is not the servant of anyone, save of the law itself. The responsibility for law enforcement lies on him. He is answerable to the law and to the law alone".

Friday, January 17, 2020

Who is the guardian for minor? மைனருக்கு யார் கார்டியன்?


Who is the guardian for minor?
மைனருக்கு யார் கார்டியன்?
பண்டிதர் முல்லா எழுதிய முகமதிய சட்டம் என்ற சட்ட விளக்கத்தில் “முகமதிய சட்டப்படி, ஒரு மைனர் ஆண் குழந்தைக்கு அவனின் ஏழு வயது வரை அவனின் தாய் தான் “பாதுகாலவர்-Custodian” ஆக இருக்க வேண்டும். அது பெண் குழந்தையாக இருந்தால், அவளின் பருவ வயது வரை (அவள் பெரியவளாக வயதுக்கு வரும் வரை – attained puberty) அவளின் தாய் தான் “பாதுகாலவர்-Custodian” ஆக இருக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும், அந்த தாய், அவளின் கணவனை (அதாவது அந்தக் குழந்தையின் தந்தையை) விவாகரத்துச் செய்து விட்டாலும், தாய் “பாதுகாலவர்-Custodian” ஆக இருப்பது அந்தந்த வயதுவரை தொடர வேண்டும்.
ஆனால், அந்த தாய், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவள் “பாதுகாலவர்-Custodian” ஆகத் தொடர முடியாது.
“பாதுகாலவர்-Custodian” என்பதை முகமதிய சட்டத்தில் ஹிசனட் – Hizanant என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒரு மைனர் குழந்தைக்கு, அவன் அல்லது அவளின் முகமதிய தந்தைதான் கார்டியன் என்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.
அந்த மைனருக்கு சொந்தமில்லாத வேறு ஒருவரை தாயோ, சித்தியோ, தாய் வழிஉறவில் உள்ளவர்களோ, திருமணம் செய்திருந்தால், அவர்கள் அந்த மைனர் குழந்தைக்கு பாதுகாவலராக இருக்க முடியாது என முகமதிய சட்டம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
தாய்க்குப்பின், யார் அந்த மைனருக்கு பாதுகாவலர் என்ற கேள்வி எழும்போது, யார் அந்த மைனருக்கு நெருக்கமான உறவினர் என்று பார்க்க வேண்டும். ஒரு கல்கத்தா ஐகோர்ட் வழக்கில், தாயுடன் பிறந்த சித்தி, வேறு ஒருவரைத் திருமணம் செய்துள்ள நிலையில் அவர் அந்த மைனருக்கு நெருங்கிய உறவினர் என் எடுத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுப்பினர். அந்த பெண், உறவு அல்லாத வேறு ஒருவரைத் திருமணம் செய்திருந்தால், அவர் எப்படி மைனருக்கு நன்மை உள்ளவராக, அன்பு உள்ளவராக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியது. சித்தி உறவு நெருங்கிய உறவுதான். அவள் தகுதி இல்லாதவள் என்று மறுக்க முடியாதுதான். ஆனால் குழந்தையின் நன்மையை பார்க்க வேண்டும் என்று சொல்கிறது.


The Guardians and Wards Act 1890 என்பது பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்த சட்டம். அது இன்னும் அமலில் இருந்து வருகிறது. இந்தச் சட்டம் எல்லா மதத்தைச் சார்ந்த மைனர்களுக்கும் பொருந்தும், அதில் உள்ள பிரிவு 17 இப்படிச் சொல்கிறது. “பாதுகாவலரோ, கார்டியனோ, யாரை நியமித்தாலும், அது மைனரின் நன்மைக்காக இருக்குமா என்பதை கோர்ட் கவனத்தில் கொண்டு நியமிக்க வேண்டும்” என்று சொல்கிறது. அவர் ஒரு வெளி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்கிறது. முகமதிய சட்டமும் யாரையும் கார்டியனாகவோ, பாதுகாவலனாக இருக்கவோ தகுதி இல்லாதவர் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இந்த வழக்கில், தந்தை பொறுப்பில்லாமல் இருக்கிறார். தாய், கொடுமை தாங்காமல் வீட்டை விட்டும், கணவனை விட்டும் வெளியேறி விட்டார். பின்னர் வேறு ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். அப்படிபட்ட சூழ்நிலையில், தாய், அந்த குழந்தையை போதிய அன்பு செலுத்துவர் என்று கருத இடமில்லை. தந்தை, பொறுப்பற்றவர் என்றாலும் அவர் பாதுகாவலராக தொடரலாம். தந்தை வேறு ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அந்த மனைவி மூலம் குழந்தை இல்லை.
எனவே, தற்போது குழந்தைக்கு 7 வயதுதான், தந்தையிடமே இருக்கலாம். தந்தையின் தாய் (தந்தைவழிப்பாட்டி) குடும்பத்தில் இருக்கிறார். அவர் அந்த குழந்தையைப் பார்த்துக் கொள்வார்.
கார்டியன் சட்டடப்படி, இதுவே குழந்தைக்கு நன்மை பயக்கும் என்பதால் இதையே முடிவாக கோர்ட் அறிவித்து விட்டது.
**



1944-ல் இந்து விதவைகளின் சொத்துரிமை பற்றி


Chettiar’s Property case in 1944
இந்து விதவைகளின் சொத்துரிமை பற்றி:
RM.AR.AR.RM.அருணாசலம் செட்டியார் என்பவர் தேவகோட்டையில் உள்ள நாட்டுக் கோட்டை செட்டியார்களில் மிகப் பெரிய பணக்காரர். இவர் ஒரு உயில் எழுதி வைத்துவிட்டு, 1938-ல் இறந்து விடுகிறார். இந்த உயிலை சப்கோர்ட்டில் புரேபேட் ஆர்டர் பெறுகிறார்கள்.
புரபேட் (Probate) என்பது, உயில் எழுதியது உண்மைதான் என்று அதில் உள்ள சாட்சிகளைக் கொண்டு நிரூபித்து பெறப்படும் நிரூபணச் சான்றிதழ்.
அந்த காலத்தில், 1938-ல் இறந்த அருணாசலம் செட்டியாரின் சொத்துக்களின் மதிப்பு ரூ.40 லட்சத்தை தாண்டும். இந்தியாவில் இல்லாமல், பர்மா (அப்போது பிரிட்டீஸ் நிர்வாகத்தில் உள்ளது), மலாய், சிலோன், கொச்சின் (அப்போது பிரன்ஸ் நாட்டின் நிர்வாகத்தில் உள்ளது) மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் அவருக்கு சொத்துக்கள் உண்டு. இது இல்லாமல், ஏகப்பட்ட சாரிட்டிகள், என்டோவ்மெண்டுகள் உண்டு. இவைகளின் மதிப்பே ஒரு 24 லட்சத்தைத் தாண்டும்.
அருணாசலம் செட்டியாருக்கு மூத்த மனைவி மூலம் ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மனைவி இல்லாமல் மேலும் இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி இவருக்கு முன்பே இறந்து விட்டார். மூத்த மனைவி மூலம் பிறந்த மகனும் இவருக்கு முன்பே இறந்து விட்டார். மூத்த மனைவியின் மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். இரண்டாம் மனைவியும் மூன்றாம் மனைவியும் இருக்கிறார்கள். இரண்டாம் மனைவிக்கு குழந்தை ஏதும் இல்லை. மூன்றாம் மனைவிக்கு ஒரு மகள் மட்டுமே.  மூத்த மனைவியின் மகன், உமையாள் ஆச்சி என்பவரைத் திருமணம் செய்திருந்தார். (பின்னர் மகன் இறந்து விட்டார்). அவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை.
அருணாசலம் செட்டியார் இறந்த பின்னர், அவரின் சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்காக, அவரின் மருமகளான உமையாள் ஆச்சி Administration Suit என்ற வழக்குப் போடுகிறார்.
அருணாசலம் செட்டியார் எழுதி வைத்த உயிலை நிறைவேற்றுபவராக (Executor) தனது மைத்துனர் சுந்தரேசன் செட்டியாரையும் தனது மருமகன் அருணாசலம் செட்டியாரையும் நியமித்திருந்தார்.
அந்த உயிலில், தனது இரண்டு மனைவிகளுக்கும் ஆண் குழந்தை இல்லாததால், அவரவர் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள உரிமை வழங்கி இருந்தார். அதேபோல், தன் மருமகளும் (இறந்த மகனின் மனைவி) ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் வழங்கி இருந்தார்.
பழைய இந்து சாஸ்திர சட்டம்:
பழைய இந்து சாஸ்திரப்படி, ஒரு இந்து ஆணுக்கு, தன் இறப்புக்குப் பின்னர், தனக்கு செய்யவேண்டிய கர்ம காரியங்களைச் செய்தவதற்காக ஒரு மகன் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்போதுதான், அந்த இறந்த இந்து ஆண் சொர்க்கத்துக்கு போக முடியும் அல்லது ஆன்மா இறைவனடி சேரும் என்பது ஒரு சம்பிரதாயம். அப்படி ஒரு மகன் இல்லாதபோது, அல்லது பிறக்காதபோது, தன் பங்காளிகளின் மக்களின் ஒரு மகனை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஒருவேளை, அப்படி தத்து எடுப்பதற்கு முன்னரே அவர் இறந்து விட்டால், தன் மனைவிக்கு அந்த உரிமையை வழங்கலாம் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
இந்தப் பின்னனியில்தான், அருணாசலம் செட்டியாரும் அவரின் உயிலில் அப்படி எழுதி இருக்கிறார். அப்படி தத்து எடுக்கும் போது, உயிலில் நியமிக்கப்பட்டுள்ள நிறைவேற்றாளர்களான மைத்துனன் சுந்தரேசன் செட்டியாரையும், மருமகன் அருணாசலம் செட்டியாரையும் கலந்து ஒப்புதல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அந்த உயிலில் எழுதி இருக்கிறார்.
அதன்படி, மூவரும் (இரண்டு மனைவிகளும், ஒரு மருமகளும்) ஆளுக்கு ஒரு மகனாக தத்து எடுத்துக் கொள்கிறார்கள். தத்து மகன்கள் மேஜர் வயதை அடைகிறார்கள். அவர்கள் மூவரும், உயிலில் நியமிக்கப்பட்ட நிறைவேற்றாளர்களுடன் சேர்ந்து சொத்துக்களையும், டிரஸ்டுகளையும் நிர்வகித்து வருகிறார்கள்.
பழைய இந்து சாஸ்திர சட்டம்:
பொதுவாக, தத்து எடுப்பது என்பது இந்து சாஸ்திர சட்டத்தி்ல் மட்டுமே உள்ளது. கிறிஸ்தவர், முஸ்லீம் ஆகியோர் தத்து எடுக்க முடியாது. அவர்களின் மதநூல்களான பைபிள், குரான் இவைகளில் அவ்வாறு சொல்லப்படவில்லை. ஏனென்றால், அங்கு மறுபிறப்பு, கர்மா, ஆன்மா போன்ற தத்துவங்களுக்கு இடமில்லை. எனவே இந்து சாஸ்திரத்தின்படி, இறந்தவரின் ஆன்மா முக்தி அடைய வேண்டுமானால், அவரின் மகன் இந்தப் பூவுலகில், தன் மூதாதையருக்கு (ஏழு தலைமுறை மூதாதையருக்கு) பிண்டம் கொடுத்து கர்மம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. மகன் இல்லாதவர் தத்து எடுத்து அந்த சாஸ்திரத்தை செய்ய வேண்டும். தத்து எடுக்காமல் காலம் சென்றவரின் விதவை-மனைவி  தன் கணவனுக்காக அவ்வாறு தத்து எடுக்கலாம். அல்லது அந்த இந்து ஆணே  உயிருடன் இருக்கும்போதே ஒரு உயில் மூலம் அந்த அதிகாரத்தை தன் மனைவிக்கு அளிக்கலாம் என்பது பழைய இந்து சாஸ்திர சட்டம்.  ஆண் குழந்தையை மட்டுமே  அவ்வாறு தத்து எடுக்க முடியும். ஒரு பெண் குழந்தையை அவ்வாறு தத்து எடுக்க முடியாது. மேலும், அந்த ஆண் குழந்தையும் 14 வயதுக்குள் இருக்க வேண்டும். தத்த ஹோமம் என்னும் நிகழ்ச்சியை நடத்தி, உறவினர்கள் முன்னிலையில் அக்னி சாட்சியாக, அந்த குழந்தையின் இயற்கை பெற்றோர்கள் (Biological parents), வளர்ப்பு பெற்றோர்களிடம் (Adoptive parents) இந்தக் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அந்த தத்து (Adoption) சாஸ்திரப்படி செல்லுபடியாகும்.
பழைய இந்து சாஸ்திர சட்டம்:
இந்த சாஸ்திர தத்து விதிகளுக்கு மாறாக தத்து எடுத்திருந்தால் அந்த தத்து செல்லாது. அப்படி எடுக்கப்பட்ட மகன், அந்த சொத்தில் எந்த உரிமையும் கோர முடியாது. ஆனாலும், ஒரு சில சமுதாயங்களில் (ஜாதிகளில்) இந்த சாஸ்திர விதிகளுக்கு மாறாக, காலம் காலமாக தொடர்ந்து வேறு ஏதாவது ஒரு “வழக்கம்” & “பழக்கம்” (Custom & Usage) தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்தால், அதில் இந்த சாஸ்திர சட்டம் மூக்கை நுழைக்காது. இந்த தேவகோட்டைப் பகுதியில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டிகளிடம் (இவர்களை நாட்டார் என்றும் சொல்வர்) ஒரு வகைப் பழக்க-வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதன்படி, இவர்கள், தனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்றால், தன் தாயாதிகளின் மகனை தத்து எடுத்துக் கொள்வார்கள். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி அந்த மகனுக்கு 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த தத்து மகனுக்குத் திருமணம் கூட ஆகி இருக்கலாம். அப்படி ஒரு பழக்க-வழக்கம் கடைப்பிடித்து வருகிறார்கள். எனவே இது இந்து சாஸ்திர விதிகளின்  விதிவிலக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அருணாசலம் அவர்களின் உயிலில் டிரஸ்டுகளை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர, அவரின் சொத்துக்களை யார் யார் அடைய வேண்டும் தனித்துச்சொல்லவில்லை. ஏனென்றால்,, அப்போது அவருக்கு மகன்கள் யாரும் இல்லை. மனைவிகளுக்கும் மருமகளுக்கும் தத்து மகன்களை எடுத்துக் கொள்ளும் உரிமை மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது.
எனவே, அவரின் மருமகள் (இறந்த மகனின் மனைவி) இந்த சிவில் வழக்கைப் போடுகிறார். எதிர் பார்ட்டிகளாக, இரண்டு மாமியார்களையும், இரண்டு உயில் நிறைவேற்றாளர்களையும் சேர்த்திருக்கிறார்.
இந்த வழக்கில், மாமனார் எழுதி வைத்த உயிலே சட்டப்படி செல்லாது என்று சொல்கிறார். இந்த உயிலை அவர் எழுதும்போது, அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பது அவர் கூற்று. (Not in a sound state of mind). அந்த உயிலை எழுதி, அவர் கையெழுத்தை போட வைத்தது, அவரின் உறவினர்களான, அவரின் மைத்துனரும், மருமகனுமான இந்த உயிலில் நிறைவேற்றாளர்களாக இருப்பவர்களே என்கிறார்.
மேலும், மருமகளின் வாதம் என்னவென்றால்: மாமனாரின் உயிலில் அவரின் சொத்துக்கள் யார் யாருக்கு போகவேண்டும் என்று எழுதப் படாத நிலையில், அந்த சொத்துக்களைப் பொறுத்து, அவர் உயில் எழுதாமல் இறந்து விட்டதாகவே கருத வேண்டும் என்பதே. (Testator died intestate in respect of the bulk of the estate).
மேலும், மருகளுக்குக் கொடுத்த சீதனமும், அவளின் மாமியாரின் சீதனமும், ஏற்கனவே மாமனார் டெப்பாசிட்டுகளாக வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவைகளும் தனக்கே வர வேண்டும் என்றும் கேட்கிறார்.
மேலும் மருமகள் சொல்கிறார்: மாமனார் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னர், தன்னை அழைத்து, “ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொள்” என்று சொன்னதாகச் சொல்கிறார். அப்படி இருக்கும்போது, உயிலில், Executors சம்மதத்தின் பேரிலேயே தத்து எடுக்க வேண்டும் என்று எப்படி எழுதி இருப்பார். அப்படியே எழுதி இருந்தாலும் அது ஒரு உத்தரவு ஆகாது. அது ஒரு  யோசனையே என்கிறார்.
இப்படியான சூழ்நிலையில், தன் சுய அறிவுடன் எழுதப்படாத அந்த உயில் செல்லாமல் போனால், மூத்த விதவை மனைவியே (மகன் இல்லாதபோது), 1937-ம் வருடத்திய இந்து பெண்கள் சொத்துரிமை சட்டப்படி, இறந்த கணவரின் முழு சொத்துக்கும் உரிமையாளராகி நிர்வகித்து வர வேண்டும் என்பது மூத்த மனைவியின் வாதம்.
ஆனால் உயில் நிறைவேற்றாளர்கள் பதில் என்னவென்றால்: இந்த உயில் அவரின் சுய சிந்தனையுடனேயே எழுதி அவர் கையெழுத்துப் போட்டுள்ளார் என்றும், எனவே அவர்கள் அந்த உயில்படி சொத்துக்களை நிர்வாகம் செய்ய அதிகாரம் உள்ளவர்கள் என்றும், அதன் வரும்படியை மட்டும் வளர்ப்பு மகன்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உயிலில் கண்டுள்ளது என்றும், சொல்கிறார்கள்.
இதில், உயில் எழுதிய அருணாசலம் செட்டியாரின் மூன்றாவது மகளை (மூத்த மனைவி மூலம் பிறந்தவள்) உயில் நிறைவேற்றாளராக உள்ள தன் மருமகனுக்குத் தான் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
சப்கோர்ட் தீர்ப்பு: இந்த உயில் கட்டாயத்தின் பேரில் ஏற்பட்ட்டது இல்லை என்றும், எனவே புரபேட் உத்தரவு வழங்கி தீர்ப்புக் கொடுத்து விட்டது.
ஆனாலும், அருணாசலத்தின் மற்ற சொத்துக்களைப் பொறுத்து அவர் உயிலில் குறிப்பிட்டுச் சொல்லாததால், அவைகளைப் பொறுத்து உயில் எழுதிவைக்காமல் இறந்ததாகக் கருதி. அவைகளுக்கு நிர்வாக உரிமையை மருமகளுக்கு உத்தரவிடுகிறது கோர்ட்.
ஆனால், மற்ற சொத்துக்களைப் பொறுத்து உயில் இல்லாமல் இருப்பதால், அவரின் இரண்டாவது மனைவி (இப்போது உயிருடன் இருக்கும் தலைமை மனைவி Senior widow) க்கு 1937 பெண்கள் சொத்துரிமை சட்டப்படி உரிமை உண்டு என்று கீழ்கோர்ட் தீர்ப்புச் சொல்கிறது.
இந்த உத்திரவை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு வழக்கு வருகிறது.
1937 பெண்கள் சொத்துரிமை சட்டம்:
 1937-க்கு முன்னர் பெண்களுக்கு இந்து கூட்டுரிமை சொத்தில் பங்கு கிடையாது. (பெண்கள், தனியாக சீதனச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது புதிய சொத்துக்களை வாங்கிக் கொள்ளலாம்). இந்து கூட்டுரிமை சொத்து என்றால், ஒரு இந்து ஆண் ஒரு சொத்தை வைத்திருந்தால் (வாங்கி இருந்தாலும், பூர்வீகமாக கிடைத்து இருந்தாலும்), அதில் அவருக்கும், அவரின் மகனுக்கும், அவரின் பேரனுக்கும், அவரின் கொள்ளுப் பேரனுக்கும் “அவர்களின் பிறப்பால்” பங்குரிமை பெறுவர். இதுவே இந்து கூட்டுரிமை சொத்து எனப்படுவது. இதை கோபார்சனரி சொத்து (Coparcenary property) என்பர். இப்போது இதை மூதாதையர் சொத்து (Ancestral Property) என்றும், பூர்வீகச் சொத்து என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். பெண்களுக்கு (அந்த குடும்பத்தில் உள்ள மனைவிகளுக்கும், மருமகள்களுக்கும் அந்த சொத்தில் பங்கு கேட்கும் உரிமை கிடையாது; ஆனால் அவர்களின் வாழ்நாள்வரை அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்து காப்பாற்ற வேண்டிய அந்த கோபார்சனர்கள் என்னும் ஆண்களின் கடமை. மகள்களைப் பற்றி இங்கு சொல்ல வேண்டுமானால், அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வரை அந்த ஆண்களின் கடமை. அதற்குப் பின்னர் அவள் வேறு வீட்டு மருமகள். இந்த வீட்டுக்குச் சம்மந்தமில்லாதவள்).
இப்படி இருந்த வந்த பெண்களின் நிலையை சற்று உயர்த்த நினைத்த பிரிட்டீஸ் அரசு  (ஏனென்றால், அந்தக் காலக்கட்டத்தில்தான், இங்கிலாந்தில் பெண்களுக்கு சொத்துரிமை வந்து விட்டது), 1937-ல் இந்து பெண்கள் சொத்துரிமை சட்டம் கொண்டு வருகிறது.
குறிப்பு: இந்து பெண்களுக்குத்தான் இந்த நிலை. கிறிஸ்தவப் பெண்களுக்கு கணவர் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு என்று ஏற்கனவே 1925-ல் சட்டம் வந்து விட்டது. முஸ்லீம் பெண்களுக்கு தந்தை, தாய் சொத்தில் மகனுக்கு முழுப் பங்கு என்றும் மகளுக்கு பாதி பங்கு என்றும், கணவர் சொத்தில் குழந்தைகள் இருந்தால் எட்டில் ஒரு பங்கு என்றும், குழந்தைகள் இல்லை என்றால் நான்கில் ஒரு பங்கு என்றும் ஷரியத் சட்டம் ஏற்கனவே இருந்து வருகிறது. எனவே இந்து பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு இல்லை. எனவே ஒரு இந்து பெண், அவள் கணவன் உயிருடன் இருக்கும்வரை அவன் தயவில் வாழ்கிறாள். கணவன் இறந்தபின், கணவனின் தாயாதிகள் தயவில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். எனவே கணவன் இறந்தபின்னர், அவருக்குச் சேர வேண்டிய பங்கு முழுவதும் அவளின் பங்காக அனுபவிக்கலாம். ஆனால் முழுமையாக அனுபவிக்க முடியாது. வாழ்நாள் சுதந்திரம் மட்டுமே உண்டு. கிரயம் செய்ய முடியாது. எனவே இது அவளின் ஜீவனாம்ச உரிமை மட்டுமே. இதுதான் 1937-ல் பெண்களுக்குக் கொடுத்த சொத்துரிமை. பின்னர் 1956-ல் வந்த இந்து வாரிசுரிமை சட்டத்தில் விதவை மனைவிக்கு அவளின் கணவனுக்குக் கிடைக்கும் “கூட்டுக் குடும்பச் சொத்தில்” கிடைக்கும் பங்கில் மற்ற வாரிசுகளுடன் ஒரு பங்கு மட்டும் கிடைக்கும்படி மாற்றினார்கள். (கணவரின் “தனிச் சொத்தில்” மனைவிக்கு மற்ற வாரிசுகளுடன் சேர்த்து ஒரு பங்கு கிடைக்கும் என்பது வேறொரு தனிச் சட்டம்).
இங்கு அருணாசலம் செட்டியாரின் வழக்கில் தீர்ப்பு:
இந்து பெண்கள் சொத்துரிமை சட்டம் 1937 பிரிட்டீஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. அது மொத்த பிரிட்டீஸ் இந்திய நிலப்பகுதிக்கும் செல்லும். இந்தச் சட்டத்தை, பிரிட்டீஸ் பலுசிஸ்தான், சோன்தல் பர்கானாஸ் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியது. ஆனால் பர்மாவுக்கு விரிவு படுத்தவில்லை. ஏனென்றால், இந்த சட்டத்தில் கவர்னர்-ஜெனரல் கையெழுத்து இட்ட தேதி 14 ஏப்ரல் 1937. ஆனால் பிரிட்டீஸ் இந்திய நிலப்பரப்பில் இருந்து 1 ஏப்ரல் 1937லிலேயே அது பிரிக்கப்பட்டு விட்டது. 1940-ல் இந்தச் சட்டத்துக்கு ஒரு திருத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதும் அது பர்மா பகுதியை பிரிட்டீஸ் இந்தியப் பகுதி என்று சொல்லவில்லை.
எனவே இந்தியாவில் உள்ள சொத்துக்கள் மட்டும் இந்த கோர்ட் அதிகார எல்லைகுக்கு உட்பட்டது. இதில் விவசாய நிலத்துக்கு இந்த 1937 சட்டம் பொருந்தாது.
எனவே, அருணாசலம் என்ற தகப்பனும், அவரின் இறந்த மகனும் கோபார்சனர்கள். எனவே இருவருக்கும் பாதி பாதி பங்கு உள்ளது. அந்த இறந்த மகனுக்கு கிடைத்த பாதி சொத்து அவனின் மனைவியான விதவைக்கு (இங்கு வழக்குப் போட்டவள்) கிடைக்கும். இது 1937 பெண்கள் சொத்துரிமை சட்டத்தின்படி கிடைப்பதால், விவசாய நிலத்தில் அவள் பங்கு பெற முடியாது. மற்ற சொத்துக்களில் பங்கு பெறலாம். பர்மாவில் உள்ள சொத்தில் 1937 சட்டப்படி அவளுக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால், 1937 பெண்கள் சொத்துரிமை சட்டம் பிரட்டீஸ் இந்திய எல்லைக்கு உட்பட்ட சொத்துக்களுக்கு மட்டுமே செல்லும். அப்போது, பர்மா பிரிட்டீஸ் இந்தியப் பகுதியாக இல்லை. வேறு நாட்டில் உள்ள சொத்துகளில் அந்த நாட்டு சட்டப்படியே கிடைக்கும்.
அருணாசலம் செட்டியாரின் கூட்டுரிமைபங்கு அவரின் விதவைகளுக்குப் போய் சேரும். டிரஸ்ட் சொத்துக்களில் கடைசி டிரஸ்டி அவரே ஆவார். அடுத்த டிரஸ்டிகள் இல்லாத நிலையில், (இங்கிலாந்து சட்டப்படியே இந்தியாவிலும் இருப்பதால்), அவரின் வாரிசுகளே அடைந்து கொள்ளலாம்.
**


சிற்பக்கலை வேலைவாய்ப்பு பற்றிய வழக்கு


சிற்பக்கலை  வேலைவாய்ப்பு பற்றிய வழக்கு
இந்தியாவில் உள்ள கோயில்களின் கட்டிடக்கலையை பராமரிக்கவும், சிற்பங்களை உருவாக்கவும், சீரமைக்கவும், தேவை ஏற்பட்டு, 1957-ல் மாமல்லபுரத்தில் ஒரு கல்லூரி ஆரம்பிக்கபட்டது. The Tamil Nadu Institute of Architecture and Sculpture, Mamallapuram. இங்கு கோயில் பராமரிப்பு, சிற்ப வேலைப்பாடு முதலிய பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. மொத்தம் 58 துறைகளில் பட்டம் வழங்கப்படுகிறது. இது சென்னை பல்கலைகழத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. Bachelor of Fine Arts Degree என்பது 1981 முதல் தொடங்கபட்டுள்ளது. இது நான்கு வருட படிப்பாகும். பின்னர் 8 வருடப் படிப்பாக ஆக்கப்பட்டது. இதற்கு தகுதி எட்டாவது தேர்வு அல்லது தோல்வி இருந்தால் போதும் என்று இருந்தது. பின்னர் 1981-ல் இதை Bachelor of Fine Arts in Traditional Architecture and Traditional Sculputure என்று மாற்றி, அதற்குத் தகுதியாக +2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கொண்டு வந்து, நான்கு வருடப் படிப்பாக ஆக்கப்பட்டது. இந்தியாவிலேயே இங்குதான் இப்படிப்பட்ட கல்லூரி உள்ளது. 40 மாணவர்கள் வருடாவருடம் வெளிவருகிறார்கள். இது ஆரம்பிக்கப்பட்ட 1957-லிலிருந்து இதுவரை சுமார் 1800 மாணவர்கள் வெளிவந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு ஸ்தபதிகள் தேவைப்பட்டாலும், HR&CE துறை மூலம் இவர்களைத் தேர்வு செய்வதில்லை. மாறாக வெளி ஆட்களிடம் ஒப்பந்தம் மூலமே தேவைப்படும் வேலைகளைச் செய்து கொள்கிறார்கள். ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஸ்தபதிகளை அரசாங்கம் நியமனம் செய்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 38,615 இந்து கோயில்கள், ஜெயின் கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் அரசின் HR & CE துறையின் கீழ்தான் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.  இங்குள்ள பல கோயில்கள் 100 வருடங்களுக்கும் மேலானவை. சில கோயில்கள் 1000 வருடங்களுக்கும் மேலானவை.
எனவே இந்த கோயில்களுக்கு அந்த பட்டப்படிப்பு படித்த ஸ்தபதிகளை நியமித்தால் என்ன என்று ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுப் போட்டார்.  தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோயில்களும் Joint Commissioner and Deputy Commissioner of the HR&CE துறையின் நிர்வாகத்தில் உள்ளது. இங்கு இருக்கும் Engineers கோயில் கட்டிடத் துறை வல்லுநர்கள் அல்ல. அவர்களுடன் ஸ்தபதிகளையும் நியமிக்கலாமே என்று கேட்கிறார். அவர்களுக்கு கோயில் கட்டிட நுணுக்கம், சிலை வடிவமைப்பு நுணுக்கம் தெரியும் என்கிறார்.
ஆனால் அரசு தரப்பில், ஸ்தபதிகளை ஒப்பந்தம் மூலமே நியமித்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறது. அரசு, கல்லூரிகளை உருவாக்கலாம், ஆனால் அவர்களுக்கு வேலைகளையும் உருவாக்க முடியாது என்கிறது.
தமிழ்நாட்டில் 50,000 கோயில்களுக்கு மேல் உள்ளன. அதில் சுமார் 38,000 கோயில்களுக்கு மேல் அரசின் நிர்வாகத்தில் உள்ளது. அதில் சில கோயில்கள் சுமார் 2,000 வருடங்களைத் தாண்டியும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கோயில்களில் கர்ப்பகிரகத்தில் உள்ள விக்கிரகங்கள் மட்டுமே சிலைகள் என்று கருத முடியாது. கடவுள் சிலைகளும் இருக்கின்றன. (The temples not only consist of deities in the form of idols, but also sculptures in the form of idols with marvelous architecture).
தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களை Archaeological temples ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959 & Act 1991 இவைகளின் நோக்கமே, “பழமையான இந்து கோயில்களை புரணமைப்பு செய்வதற்காக... என்ற நோக்கில் தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
இடையில் கோயில் கமிட்டிகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் அது நீக்கப்பட்டு இப்போது Commissioner, Joint Commr., Dy Commr., Asst. Commr. என்ற வரிசையில் நிர்வாகம் நடக்கிறது.
இந்த வழக்கில், ஸ்தபதிகளையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகச் சட்டத்தை கொண்டுவரும்படி அரசுக்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
**


Protracted Litigation வழக்கை இழுத்தடிக்கும் மனுக்கள்


 Protracted Litigation
வழக்குப் போடுபவர், தனது சட்ட உரிமையை நிலைநாட்டவே கோர்ட்டை நாடுகிறார். அப்படி வழக்குப் போட்டுவிட்டு, வேறு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டு இருக்க கூடாது. வழக்கு நடத்த தயாராக இருக்க வேண்டும். வழக்கை வேண்டுமென்றே நடத்தால் விட்டுவிடுவது, பின்னர் ஒரு மனுவைப் போட்டு மறுவிசாரனைக்கு கேட்பது, அந்த மனுவையும் காலதாமதமாகப் போடுவது, அந்த கால தாமதத்தை மன்னிக்கச் சொல்லி மனுப்போடுவது, அதற்கும் ஏதாவது பொய்யான காரணங்களைக் கூறுவது, இவை எல்லாமே வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமே.
உண்மையிலேயே சில நியாயமான காரணங்களால், வழக்கு நடத்த முடியாமல் விட்டிருப்பார். அப்போது அவ்வாறான மனுவை போட்டு, மறுவிசாரனை கேட்கலாம். ஆனால் அதற்கு நம்பத்தகுந்த காரணமும், ஏற்றுக் கொள்ளகூடிய காரணமும் வேண்டும்.
The litigants cannot be abused for the purpose of prolongation and protection. Litigants are approaching the Court for establishing their legal rights. While doing so, they are expected to be vigilant and proper in disposal of the cases. The Court cannot encourage prolongation of litigation at the instance of the parties.
பொதுவாக, மனுக்களை கால தாமதமாகப் போட்டால், அதற்கு தகந்த, நம்பும்படியான, நியாயமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணத்தைச் சொல்ல வேண்டும். கால தாமதத்தை மன்னிப்பது என்பது விசாரனை கோட்டின் தனிப்பட்ட விருப்ப முடிவாகும். அந்த “விருப்ப முடிவில்” அப்பீல் கோர்ட் ஏதும் தலையிட முடியாது.  ஆனால் வேறு சட்ட சிக்கல் இருந்தால் மட்டுமே அப்பீல் கோர்ட் தலையிட முடியும். மற்றும் அந்த விருப்ப முடிவை விசாரனை கோர்ட் தன்னிச்சையாக காரண காரியங்களை கவனிக்காமல் எடுத்திருந்தால் அப்படிப்பட்ட முடிவில் அப்பீல் கோர்ட் தலையிடலாம்.
காலதாமதத்தை மன்னிக்கும் போது, கீழ்கோர்ட் கொஞ்சம் சலுகையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு, வழக்குக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படாமல், வழக்கின் பார்ட்டிகளுக்கு கஷ்டம் கொடுப்பதாக இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதற்காக பொய்யான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட் Rukmini v. Rajendran (2003) 1 LW 585 என்ற வழக்கில் தீர்ப்பாகச் சொல்லியுள்ளது.
வேறு ஒரு வழக்கான பாங்க் வழக்கில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வழக்கில் (1990-1 LLN 457) Justice M.Srinivasan அவர்களின் தீர்ப்பில், “கால தாமதத்தை மன்னிப்பதால், எதிர் பார்ட்டிக்கு ஒரு நஷ்ட ஒன்றும் இல்லை என்று பொதுவாகச் சொல்லி விட முடியாது. காலம் கடந்து தாக்கல் செய்யும் மனுவை, எதிர்பார்ட்டி புதிதாக சந்திக்கும்போது, மிகுந்த சிரமத்துக்கும் ஆளாவார்” என்று கூறப்படுள்ளது.
“If a litigant chooses to approach the Court long agter the time prescribed under the relevant provisions of the law, he cannot say that ‘no prejudice would be caused to the other side’ by the delay being condoned. The other side would have in all probability destroyed the records thinking that the records would not be relevant as there was no further proceedings in the matter. Hence, to view a matter of condonation of delay the respondent in that application will be fallacious.”
கால தாமதத்தை மன்னிப்பதற்காக Limitation Act Sec.5 இருக்கிறது. அதில், Sufficient cause சரியான காரணம் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பல வழக்கின் தீர்ப்புகளில் “காலதாம மன்னிப்பு மனுக்களை கொஞ்சம் விசாலமான மனதுடன் அணுக வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஏனென்றால், அந்த மனு தள்ளுபடியானால், அவரின் “வழக்குப்போடும் உரிமையே” போய்விடும் என்பதால். எனவே கோர்ட்டுகள் கொஞ்சம் காலத்துக்கு ஏற்ற சூழலையும் கவனிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.The Court is to adopt a pragmatic approach to condone the delay when there is no negligence, inaction, or want of bona fide on the part of the applicant. உண்மையில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யவில்லை என்றால், அவரிடம் கொஞ்சம் விசாலமான மனதுடன் அணுகலாம்.
**

Thursday, October 3, 2019

வைப்பாட்டி மகனுக்கு சொத்துரிமை



வீரப்பா  கவுண்டனும், சுந்தர கவுண்டனும் சகோதர்கள். இந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். வீரப்ப கவுண்டன் 1866-ல் இறக்கிறார். அவருக்கு அம்மாச்சி என்று ஒரு வைப்பாட்டி உண்டு. அவளுக்கு மருதமுத்தா, பெரியண்ணன் என்று இரண்டு மகன்கள் வீரப்ப கவுண்டர் மூலம் பிறந்தவர்கள். வீரப்ப கவுண்டன் தம்பியான சுந்தர கவுண்டன் 1867-ல் இறக்கிறார். சுந்தர கவுண்டனுக்கு வீரம்மாள், மீனாட்சி என இரண்டு மனைவிகள்.
சுந்தர கவுண்டன் இறந்தபின்னர், அவரின் இரு மனைவிகளும், அவரின் சொத்துக்கள் சிலவற்றை அடமானம் வைத்து விடுகிறார்கள். ஆனால் வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டி மகன்களான மருதமுத்தா, பெரியண்ணன் இருவரும், இது பொதுக் குடும்பச் சொத்து என்றும், அதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்றும் வாதம் செய்கிறார்கள்.
இந்தச் சொத்துக்கள் சுந்தர கவுண்டனின் சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவர் இறப்புக்குப் பின்னர் அவரின் இரண்டு மனைவிகளுக்கும் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும் என்பதே அப்போதைய இந்து சாஸ்திரச் சட்டம்.
The only question, therefore, which it is and what interest, Virappa’s illegitimate sons have in the property in suit. வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டி மகனுக்கு இந்தச் சொத்தில் பங்கு உள்ளதா அல்லது இல்லையா என்பதே வழக்கின் கேள்வி.
இந்து மித்தாச்சரா சட்டப்படி, வைப்பாட்டி மகனுக்கு, தந்தையின் தனிச் சொத்தில் பங்கு உண்டு. இந்த வழக்கில் வீரப்ப கவுண்டன், கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர். இந்த ஜாதியில், வைப்பாட்டி மகனுக்கு, தந்தையின் தனிச் சொத்தில் பங்கு உண்டு என்பதே மித்தாச்சரா சட்டம் சொல்கிறது.
மித்தாக்சரா அத்தியாயம் 1, பிரிவு 12-ல் சமஸ்கிருத வார்த்தைகளில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது. “தாசி & தாசி புத்திரன்” என்ற இரு வார்த்தைகளில் சொல்லபட்டுள்ளது. இதையே சரஸ்வதி விலாசா என்ற இந்து சட்டத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில், பெண் அடிமைகள், பெண் அடிமைகளின் மகன்கள், இவர்களைப் பற்றி மித்தாச்சரா சட்டம் சொல்கிறது. வங்காளப் பகுதியில் நடைமுறையில் இருக்கும் இந்து தயாபாக சட்டத்திலும், “திருமணம் ஆகாத சூத்திரப் பெண்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்து மித்தாக்சரா சட்டப்படி “வைப்பாட்டி” என்பவள் “தாசியா” என்ற கேள்வி எழுகிறது.
இந்து தயாபாக சட்டம் நடைமுறையில் உள்ள வங்காளப் பகுதியில், ஒரு வழக்கான கல்கத்தா ஐகோர்ட் வழக்கில் (Narain Dhara v. Rakhal Gain, ILR Cal. 1) தாசி என்பது அடிமை பெண் என்றும், தொடர்ந்து ஒருவனிடம் வைப்பாட்டியாக இருப்பவள் இல்லை என்றும் சொல்லி உள்ளது.
சமஸ்கிருத வார்த்தையில் வைப்பாட்டி என்பவளை “அவருதா” Avaraudda என்றே குறிப்பிடுகிறது. தாசி என்பவள், ஒரு பெண், அடிமையாக இருப்பவள் என்று சொல்கிறது. இப்படிப்பட்ட பெண் அடிமைகளை சட்டம் 5/1843 சட்டத்தின்படி பழைய இந்து சாஸ்திரச் சட்டத்திலிருந்து நீக்கி விட்டது.
அடிமைப் பெண் அல்லது தாசி என்ற வார்த்தைகளை இந்து நாரதா சாஸ்திரத்தில் எப்படி குறிப்பிடுகிறார்கள்? நாரதா குறிப்பிடுவது என்னவென்றால்:  ஆண், பெண், அடிமைகளை 15 வகையாகச் சொல்கிறார்கள்.
1)      கிரகதாசன் (அதாவது தாசி பெற்ற பிள்ளை),
2)      பணத்துக்குப் பெற்றவன்
3)      தானத்துக்கு கொடுத்தவன்.
4)      தாசன் வழிமுறையில் வந்தவன்.
5)      பஞ்ச காலத்தில் உணவு கொடுத்து அவனைப் பாதுகாத்ததால் பின்னர் தாசன் ஆனவன்.
6)      அடமானமாகப் பெற்றதால், தாசன் ஆனவன்.
7)      கடன் கொடுக்க முடியாமல் போனதால், தாசன் ஆனவன்.
8)      போரில் அடிமைப் படுத்தப்பட்டவன்.
9)      போட்டியில் வெல்லப்பட்டு அடிமைப்படுத்தப் பட்டவன்.
10)   தானே வலிய வந்து தாசன் ஆனவன்.
11)   முற்றும் துறந்து தாசன் ஆனவன்.
12)   ஒரு குறிப்பிட்ட காலம் வரை தாசனாக இருக்கு ஒப்புக் கொண்டவன்.
13)   பக்தியினால், தாசன் ஆனவன்.
14)   தன் மனைவிக்காக, மற்றொருவருக்கு தாசன் ஆனவன்.
15)   தானே தன்னை விற்றுக் கொண்டு தாசன் ஆனவன்.
இந்து மித்தாக்சரா சாஸ்திர சட்டமும் இந்த 15 வகையான அடிமைகளை ஒப்புக்கொள்கிறது. தத்த மீமாம்சா சாஸ்திரம் பிரிவு 4, 16-ல் இவ்வாறு சொல்லப்படுகிறது. “ஒரு பெண்ணை, அவளுக்கான விலையைக் கொடுத்து வாங்கி விட்டால், அவளுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்து வந்தால்,  அவளை அடிமை என்று சொல்லலாம். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை தாசி புத்திரன் என்றும் சொல்லலாம்.”
மேலும், ஒருனை அல்லது ஒருத்தியை, தலையை மொட்டை அடித்து ஏற்றுக் கொண்டால், அவன் அல்லது அவள் அடிமை என்று தத்த மீமாம்ச சாஸ்திரம் பிரிவு 4, 40-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்ஜாதிப் பிரிவினரைப் பற்றிச் சொல்லும்போது பிகஸ்பதி பண்டிதர் குறிப்பிடுவது என்னவெ்ன்றால், திருமணம் ஆகாத சூத்திரப் பெண்ணுக்கு, ஒரு ஆண் மூலம் மகன் பிறந்தால், அந்த ஆணுக்கு வேறு வாரிசுகள் இல்லையென்றால், அவனின் சொத்துக்களை அந்த மகன் அடையலாம் என்று சொல்லியுள்ளது. மற்றொரு சாஸ்திர பண்டிதரான கௌதம பண்டிதரும் இதையே சொல்லி உள்ளார்.
காட்டாயனா பண்டிதரின் கூற்றுப்படி – “ஒரு அடிமைப் பெண்ணுடன் அவளின் எஜமான் உடலுறவு வைத்துக் கொண்டால், அதன் மூலம் அவளுக்குப் பிறக்கும் மகன், அந்த எஜமானின் சட்டபூர்வ மகன்கள். வளர்ப்பு மகன்கள் இவர்களுடன் சொத்துக்கு போட்டியிட முடியாது. ஆனால், ஒரு பெண்ணைத் தனித்து பல வருடங்களாக வைப்பாட்டியைப் போல வைத்துக் கொண்டிருந்து,  அவள் மூலம் மகன் பிறந்தால், அவன் தந்தையின் சொத்தில் பங்கு பெறலாம் என்று சொல்கிறது.
ஆக, அடிமையாக இருக்கும் பெண்ணுடன் உடலுறவு கொண்டு பிள்ளை பிறந்தால், அவனுக்கு தகப்பன் சொத்தில் பங்கு இல்லை. ஆனால், தனியே ஒருத்தியுடன், இவன் மட்டுமே உடலுறவு கொண்டு, அவள் மூலம் பெற்ற மகன் (அதாவது வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு அதன் மூலம் பெற்ற மகன்), தந்தையின் சொத்தில் பங்கு பெறுவான்.
மேலும், இந்து மித்தாச்சரா சாஸ்திர சட்டத்தில் சுலோகம் 288-ல் விவாகர காண்டத்தில், “அவருதா” & “பஞ்சியா” (Avarudda & Bunjya) என்று இருபிரிவு தாசிகளைப் பற்றிச் சொல்கிறது.
மேலும், ஸ்மிருதி சந்திரிகா சாஸ்திரத்தின் பண்டிதர், “இந்த கலியுகத்தில், எந்தத் திருமணம் செல்லாது என்று சொல்லும்போது, திருமணம் ஆகாத ஒரு சூத்திரப் பெண், ஒரு மேல்ஜாதி ஆணுடன் உடலுறவு கொண்டு, அதில் பெற்ற மகனுக்கு, தந்தையின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை என்று சொல்கிறது. மேல் ஜாதி என்பது இங்கு, பிராமணர், சத்திரியர், வைசியர், என்ற மூன்று பிரிவைச் சொல்வதாக மனு சாஸ்திரம் சொல்கிறது.
இது இவ்வாறு இருக்க –
இங்கு, தாசி என்பது அடிமை என்பது விளங்குகிறது. ஆனால் தொடர்ந்து தனியே ஒருவனுக்கு வைப்பாட்டியாக இருப்பவளைத் தாசி என்று சொல்லலாமா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. Whether there is reason to hold upon the texts that an unmarried Sudra woman kept as a continuous concubine came within its scope of Dasi?
ஒருத்தியை அடிமையாக வைத்திருந்தால், அவளுக்குப் பிறக்கும் குழந்தை, தந்தையின் சொத்தில் பங்கு பெற முடியாது. ஆனால் ஒருத்தியை தொடர்ந்து தன் மனைவி போலவே நடத்தி வந்து, திருமணம் மட்டும் செய்து கொள்ளாமல், அவள் மூலம் குழந்தை பெற்றிருந்தால், அந்த குழந்தை, தன் தந்தையின் சொத்தில் பங்கு பெறலாம்.
இந்து மித்தாச்சரா சட்டம் என்ன தெளிவுபடுத்திகிறது என்றால், வைப்பாட்டியின் மகன், பூர்வீகச் சொத்தில், மற்ற சட்டபூர்வ மகன்களுடன் சரிசமமாகப் போட்டி போட்டு பங்கு பெற முடியாது. தந்தையின் பாகத்தில் மட்டுமே அவன் வைப்பாட்டி மகன் என்ற முறையில் (அதாவது அவரின் மகளின் மகன் பங்கு பெறுவதைப் போல) பங்கு பெற முடியும், அதுவும் அவன் சூத்திரப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்தவனாக இருக்க வேண்டும்.
இந்து கோபார்சனரி கூட்டுச் சொத்து என்பது சபிண்டா உறவுகளுக்கு மட்டுமே, அதுவும், சட்டபூர்வ திருமணம் மூலம் பிறந்த மகன்களில் மட்டுமே.
இந்த வழக்கில் உள்ள சொத்து வீரப்ப கவுண்டன் தம்பி சுந்தர கவுண்டன் சொத்து என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது, வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டியின் இரண்டு பிள்ளைகளும், சித்தப்பன் சொத்தில் பங்கு பெற இந்து கோபார்சனரி உரிமை உண்டா என்பதும் கேள்வியாகிறது.
தத்த சந்திரிகா சாஸ்திரம் பிரிவு 5, 22-ல் பழைய இந்து சாஸ்திரப்படி, மகன்கள் எத்தனை வகை என்று சொல்கிறது. அதாவது, சொத்து உரிமை பெறும் மகன்களின் வகைகள் சொல்லப் பட்டுள்ளது. அதில் சட்டபூர்வமற்ற மகன் ஒரு வகை. அவன் நேரடி வாரிசாக முடியாது என்றும், மகளின் மகனுடன் சேர்ந்தும் பங்கு பெறும் தகுதியும் இல்லை என்றும் சொல்கிறது. ஏனென்றால், சட்டபூர்வமற்ற மகன் என்பவன் சட்டபூர் திருமணத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து பங்கு பெற தகுதி உடையவன் அல்லன்.
எனவே வைப்பாட்டி மகன், அவனின் தந்தை சொத்தில் பங்கு பெறலாம். ஆனால், அவன் சித்தப்பா சொத்தில் பங்கு பெற உரிமை கிடையாது, ஏனென்றால், அவன் கோபார்சனர் இல்லை. சட்டபூர்வ திருமணத்தில் பிறந்தவர்களே கோபார்சர்கள் ஆவர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, வைப்பாட்டி மகன்களுக்கு சித்தப்பன் சொத்தில் பங்கு இல்லை என்று சொல்லி விட்டது.
இந்த வழக்கு Krishnaayyan and others v. Muttusami, (1883) ILR 7 Mad 407 என்ற வழக்காகும். இதன் தீர்ப்பு Justice C.A.Turner Kt. & M.Muthusamy Ayyar ஆகிய ஐகோர்ட் நீதிபதிகள் 26 ஏப்ரல் 1883-ல் வழங்கி உள்ளனர்.
**

TRANSGENDER WOMAN LOST HER JOB


TRANSGENDER WOMAN LOST HER JOB
இன்றிலிருந்து சுமார் 58 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவன் பெயர் ஸ்டீபன்சன்ஸ். அவனுக்கு ஐந்து வயது ஆகும்போது, அவன் உடலில் ஏதோ மாற்றம் தெரிவதை உணர்கிறான். அவன் பெண்ணின் இயல்பை அடைகிறான். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆண் உடையில் ஆணாகவே வாழ்கிறான். படிக்கிறான். வயது வந்தவுடன் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறான். அவனுக்கு அரசாங்க வேலையும் கிடைக்கிறது. இடுகாட்டின் நிர்வாக அதிகாரி வேலையைப் பார்க்கிறான்.
வாழ்க்கை இப்படியே ஒடுகிறது. ஆனால் அவனின் பெண்மைத் தன்மை தலைதூக்கி நிற்கிறது. வேலையில் ஆண் உடையில் வேலை பார்ப்பான். வீட்டுக்கு வந்ததும் பெண் உடைக்கு மாறிக் கொள்வான். கடைகளுக்குச் செல்லும் போதும் பெண் உடைதான். அதுவே அவனுக்கு மனதுக்குப் பிடித்து விட்டது.
ஆக அவன் வாழ்வில் இரண்டு வேடங்களில் வலம் வரவேண்டிய கட்டாயமாகிறது. வெளி உலகத்துக்கு ஆணாகவும், அவன் உள் உலக வீட்டில் பெண்ணாகவும் வாழ்கிறான். இது அவனுக்கு மனச் சோர்வைக் கொடுக்கிறது. ஒருநாள், முழுவதும் மனம் உடைந்த நிலையில் தற்கொலைக்கும் முயன்று, துப்பாக்கியை தன் நெஞ்சில் வைக்கிறான். ஆனாலும், அவன் அவன் என்ற அவளை விரும்புவதால், தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவில்லை.
2013-ல் அவன் மனம் ஒரு தெளிவு பெறுகிறது. ஏன், நான் இதை வெளி உலகுக்கும் தெரிவிக்கக் கூடாது என்று நினைக்கிறான். நண்பர்களை கலந்து ஆலோசிக்கிறான். சரி என்ற முடிவுக்கு வருகிறான். தன் மேலதிகாரிக்கு கடிதம் எழுதுகிறான். நான் ஒரு ட்ரான்ஸ்ஜென்டர் Transgender என்று. ஆணாக இருந்தாலும் நான் ஒரு பெண் தன்மை கொண்டவன். எனவே நான் என்னைப் பெண்ணாகவே கருதுகிறேன். எனவே இனி நான் அலுவலகம் வரும்போது, பெண் உடையில் வரவே விரும்புகிறேன். எனக்கு பெண் அலுவலகச் சீருடை வழங்க வேண்டும் என்று கேட்கிறான்.
மேலதிகாரி, இதற்குப் பதிலாக, “இது சாத்தியப்படாது. எனவே நீங்கள் வேலையை விட்டு நின்று விடுங்கள். மூன்று மாதச் சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று பதில். அவன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், மேலதிகாரி, அவனை வேலையை விட்டுத் தூக்கி விடுகிறார்.
அவனும் விடுவதாக இல்லை. மாவட்ட கோர்ட்டில் வழக்குப் போடுகிறான். அரசாங்க வேலையில் ஆண், பெண் என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதே அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டம். அப்படி இருக்கும்போது, என்னை ஆண்-பெண் வித்தியாசம் பார்த்து வேலையில் இருந்து நீக்கியது செல்லாது என்று வழக்குப் போடுகிறான். ஆனால் மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக இல்லை. “ஆண்-பெண் வித்தியாசம் பார்க்கக் கூடாதுதான். ஆனால் அது பிறப்பால் ஆண்-பெண் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். டிரான்ஸ்ஜென்டர் என்னும் ஆண், பெண்ணாக மாறியவருக்கு பொருந்தாது” என்று தீர்ப்புச் சொல்லிவிட்டது.
இந்த மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து 2018-ல் பெடரல் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். பெடரல் கோர்ட், இவரின் அப்பீல் வழக்கை ஏற்றுக் கொள்கிறது. “அமெரிக்க அரசியலைப்புச் சட்டத்தின் படி, ஆண்-பெண் வித்தியாசம் என்பதை உத்தியோகத்தில் பார்க்க முடியாது” என்று தீர்ப்பு வழங்கி விட்டது.
ஆனாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேலதிகாரி, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்திருக்கிறார். அந்த அப்பீல் வழக்கு இன்னும் சில வாரங்களில் விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கிறார்.
அமெரிக்க அரசின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்றால், பிறப்பால் ஆண்-பெண் என்ற வித்தியாசத்தை வேலையில் பார்க்கக் கூடாது. ஆனால், டிரான்ஸ்ஜென்டர் என்னும் ஆண்-பெண்ணாக மாறுவதை இதில் சேர்க்க முடியாது என்று கூறுகிறது.
Federal law barring discrimination on the basis of sex only applies to biological sex, not sexual identity or orientation.
ஆனால், இந்த ஸ்டீபன்ஸ் நிலைப்பாடு என்னவென்றால், உலகின் எல்லா மனித இனமும் ஒரே உரிமையைப் பெற வேண்டும் என்பதே. அமெரிக்க சுதந்திரம் அடைந்தபோது, அதன் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ எல்லாவித பாதுகாப்பையும் வழங்கும் என்றே கூறியுள்ளது என்று சொல்கிறார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்கள், டிரான்ஸ்ஜென்டர் வீரர்களை அமெரிக்க படைகளுக்கு சேர்த்துக் கொண்டது.
இப்போது வழக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் ஒன்பது நீதிபதிகள் இருப்பர். அதில் தற்போது ஐந்து நீதிபதிகள் பழைமைவாதம் கொண்டவர்கள் என்று கருதுகிறார்கள். எனவே தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
“நான் நானாக இருப்பதில் அவர்களுக்கு என்ன இடைஞ்சல்” என்று புலம்புகிறார்.
**